Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னது.. சன்.டி.வியில் ஞாயிற்றுக்கிழமையும் மெகாசீரியலா..! ஓஹோ அது மகாபாரதமா?
சென்னை: சன் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பப்படும் மகாபாரதம் தொடரை, என்னதான் பிரமாண்டமாக காண்பிக்க மெனக்கட்டாலும், அதன் நடிகர் தேர்வால் தினமும் ஒளிபரப்பும் நெடுந்தொடர்கள் போலவே காட்சியளிக்கிறது.
சன் டி.வியில், ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் தொடர் மகாபாரதம். இதிகாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதை. பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா இயக்கம் என்றதும் தொடர் மீதான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்தது.
குறைத்து மதிப்பிட முடியாது
மகாபாரத இதிகாசத்தை பல நூல்களின் குறிப்புகள் உதவியால் எடுத்துள்ளனர். கதையின் உண்மைதன்மையிலோ, அல்லது ஷார்ப்பான வசனங்களிலோ சன் டிவியின் மகாபாரதத்தை குறைத்து மதிப்பிட முடியாது. டிஆர்பியும் நன்றாகவே உள்ளது.
பழகிய முகங்கள்
அதே நேரம் நடிகர்கள் தேர்வுதான், ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களை பார்ப்பதுபோல உள்ளதே தவிர, அர்ச்சுனன், கர்ணன் என்று கற்பனை செய்ய ரசிகர்களுக்கு கடினமாக உள்ளது. ஏனெனில் இதில் பிரதான பாத்திரம் ஏற்றிருக்கும் பெரும்பாலானோர் நாம் அன்றாடம் பிற தினசரி சீரியல்களில் பார்த்து பழகிய முகங்கள்தான்.
வேறுபாடே தெரியலியே..
மகாபாரதத்தின் சூத்திரதாரி, பகவான் கண்ணனாக இருந்தாலும், பாண்டவர்களை சுற்றியே கதை நகரும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பாண்டவர்களுக்கான நடிகர் தேர்வு பாராட்டும்படியாக இல்லை. பீமனை தவிர மற்ற 4வரையும் அடையாளம் வைத்துக்கொள்ள முடியாதபடி ஒரே மாதிரியாக உள்ளனர். பீமனுக்கு மட்டும் நல்ல புஷ்டியான நடிகரை தேர்ந்தெடுத்திருப்பதால் அவர் தப்பித்தார்.
இது பஞ்சு முகமாச்சே!
எதிர்தரப்பில் முக்கியமான கதாபாத்திரங்கள் கவுரவர்கள். அதிலும், துரியோதனன் அதி முக்கியம். வில்லனின் ஆளுமைதான், ஹீரோவின் புகழை பறைசாற்றும். ஆனால் துரியோதனன் கதாபாத்திரத்திற்கு பஞ்சு முகத்தை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். அவரை பார்த்தால் சிரிப்பு வில்லன் போல தெரிகிறார். முகத்தில் வஞ்சகம் பிரதிபலிக்கவில்லை. கடந்த சில வாரங்களாகத்தான், கொஞ்சம் சத்தம் போட்டு கத்தி பேசி, நான்தான் துரியோதனன் என்பதை அந்த நடிகர் காண்பித்து வருகிறார். அனாலும், தமிழ் உச்சரிப்பு... முடியல.
கர்ண கொடூரம்
மகாபாரதத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் கர்ணன். ஆனால் சிவாஜியை கர்ணனாக நினைவில் வைத்துள்ள தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு, சீரியல் நடிகர் ஒருவர், உச்சரிப்பு சரியில்லாத தமிழிலில் பேசுவதை கேட்க கர்ண கொடூரமாக உள்ளது. அந்த வகையில், பீஷ்மர், சகுனி ஆகியோரின் தேர்வு சபாஷ் போட வைக்கிறது. விதுடராக வருபவரும் சீரியலில் பார்த்து பழகியவர்தான் என்றபோதிலும், கேரக்டருக்கு ஏற்ற நடிகர் தேர்வாகிவிட்டது. திருதிராஷ்டரின் தேர்வு மிகச்சரியே. ஆனால் பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னனும், புத்திரபாசத்தால் மதியிழந்தவருமான திருதிராஷ்டர், வாராவாரம் கண்ணீர் சிந்தி தனது மனைவி காந்தாரியிடம் புலம்பிக்கொண்டிருப்பது போல காட்சியமைத்துள்ளது அவரது கம்பீரத்தை குறைத்துவிடுகிறது.
தாயா, தங்கையா?
பாண்டவர்களின் தாயாக வரும் குந்தி தேவி, சில நேரங்களில் தங்கைபோல காணப்படுகிறார். அவர் தலைக்கு கொஞ்சம் அதிகமாக வெள்ளை கலரை பூசிதான் விடுங்களேன். சில வருடங்களுக்கு முன்பு, இந்தியில் இருந்து டப் செய்து ஒளிபரப்பப்பட்ட மகாபாரத கண்ணன் கதாபாத்திரத்தை நிஜ கிருஷ்ணராக மனதில் உருவகம் செய்தவர்கள் லட்சக்கணக்கானோர். எனவே தமிழ் கிருஷ்ணரை பார்க்க முதலில் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அவரது மேனரிசங்கள் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டன.
செட் சூப்பர்
அரங்கில் பிரமாண்டத்தை காண்பிப்பதற்காக செட்டிங் போட்டுள்ளது பாராட்டும்படியுள்ளது. ஆனால் குடிமக்களின் ஆடை அலங்காரம்தான் செயற்கைத்தனமாக காட்சியளிக்கிறது. அதை கொஞ்சம் சரி செய்தால் விசுவலாக சன் டி.வி. மகாபாரதம் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதே நேரம் அவுட்டோர் சூட்டிங் லொக்கேசன்கள் இன்னும் மேம்பட வேண்டும். சற்று பசுமையாக, மலைப்பாங்காக இருந்தால் பிரமாண்டம் அதிகரிக்கும்.
சன்டேயிலும், சன்டிவியில் சீரியலா?
கதாபாத்திரங்கள் தேர்வு, லொகேசன் உள்ளிட்ட சில விஷயங்களில் கோட்டைவிட்டதன் காரணமாக, மகாபாரதத்தை பார்த்துவிட்டு, "என்னப்பா சன் டி.வி.யில, சனிக்கிழமையோட சேர்த்து இப்போ, சன்டே கூட மெகா சீரியல் போட ஆரம்பிச்சிட்டாங்களா" என கேட்கத்தான் வாய் வருகிறது. சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு பார்த்தால்தான் ஓஹோ.. இது நம்ம சீரியல் நடிகர்கள் நடித்துள்ள, இதிகாச தொடரேதான், என்ற எண்ணம் மேலோங்குகிறது. இதையெல்லாம், கொஞ்சம் கவனியுங்க பாஸ்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!