Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதுயுகம் டிவியில் ரியாலிட்டி ஷோ நடுவராக சாயாசிங்…
புதுயுகம் சேனலின் அடுத்த புது வரவு நடிகை சாயாசிங். 'திறமை பொங்கும் தமிழகம்' ரியாலிட்டி ஷோவின் நடுவராக களம் இறங்கியுள்ளார்.
திருடா திருடி படத்தல் அறிமுகமானவர் சாயாசிங், தனுசுடன் இவர் ஆடிய ''மன்மதராசா...'' பாட்டு மூலம் தமிழகம் முழுவதும் பட்டைய கிளப்பியவர் சாயாசிங்.
ஆனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
சொந்த ஊர் பெங்களூர் என்பதால் கன்னடத்தில் சரோஜினி, பிரேம கதகளு என்ற சீரியல்களில் நடித்தார். தமிழில் சன்டிவியில் ஒளிபரப்பான நாகம்மா என்ற சீரியலில் நடித்தார். இப்போது சிறிய இடைவெளிக்குப் பின்னர் சின்னத்திரைக்கு வருகிறார்.
நான்குமொழிகளில் பிஸி
சினிமாவில் நடித்த போது தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்புரி ஆகிய நான்கு மொழிகளில் நடித்த பிஸியான பெண் திருமண வாழ்க்கைக்குப் பின்னர் குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளதால் சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை.
கதிர்வேலன் காதல்
மனதிற்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்று கூறும் சாயாசிங் கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதியின் அக்காவாக நடிக்கிறார்.
கதாநாயகி மட்டுமே முக்கியமில்லை
நடிப்புக்கு எல்லை, அளவுகோள் என்பதில்லை. சின்னத்திரை, வெள்ளித்திரை, கேம்ஷோ என அனைத்திலும் திறம்பட செய்தால் சிறப்பாக பிரதிபலிக்க முடியும்.
கிருஷ்ணாவின் காதல்
சாயாசிங்கின் காதல் கணவர் கிருஷ்ணா இப்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவருமே ஒரே பீல்டு என்பதால், இருவருமே கலந்து ஆலோசிப்பார்களாம்.
சீரியல் நாயகி
திறமை பொங்கும் தமிழகம் ரியாலிட்டி ஷோவில் சாயாசிங் உடன் பாடகர் விஜய் ஜேசுதாஸ், ப்ளாஷே ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். நல்ல டீமும், சிறந்த கதையும் அமைந்தால் சீரியலில் நாயகியாக நடிக்கத் தயார் என்கிறார் சாயாசிங்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!