Don't Miss!
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதுயுகம் டிவியில் மிரட்டும் ‘அனாமிகா’
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 .00மணிக்கு திகில் தொடர் , 'அனாமிகா' ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
'அனாமிகா' மெகா தொடரில் அமானுஷ்யம், திகில், மர்மம் மற்றும் நெஞ்சைத் தொடும் காதல் கதையும் இடம்பெறுகிறது.
ஜீவா மீது ராணி காதலுடன் இருக்கிறாள். அதற்கு சாட்சியாக ஜீவாவுக்கு ஒரு பிரேஸ்லெட் பரிசளிக்கிறாள். சந்தர்ப்பம் காரணமாக ஜீவாவின் வீட்டில் ராணி தங்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
அமானுஷ்ய நிகழ்வுகள்
அந்த வீட்டுக்கு ராணி வரும் நேரத்தில் இருந்தே வீட்டில் விரும்பத்தகாத அமானுஷ்ய நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இரவு நேரத்தில் ஜீவாவின் கார் யாருமற்ற ஒரு அனாதரவான இடத்தில் நின்றுபோகிறது.
கேட்கும் அழுகுரல்
தூரத்தில் யாரோ அழும் சத்தம் கேட்கிறது. அந்த அழுகுரலைத் தேடிப் போகும் இடத்தில் தன்னுடைய பிரேஸ்லெட்டை தவற விடுகிறான் ஜீவா.
ராணியின் கோபம்
தான் பரிசளித்த பிரேஸ்லெட்டை தவறவிட்ட ஜீவா மீது ராணி கோபமாகிறாள். அதனால் அதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜீவா கார் தொடங்கி காடு வரையிலும் தேடிப் பார்க்கிறான். ஆனாலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது, பிரேஸ்லெட் கிடைக்கவில்லை.
காருக்குள் பிரேஸ்லெட்
அன்று இரவு தற்செயலாக பங்களாவின் கேட் திறந்துகிடக்கிறது. கேட் எப்படி திறந்தது என்று புரியாமல் வாட்ச்மேன் விழிக்கிறான். அன்று இரவு காரில் இருந்து தனது பொருளை எடுக்கமுயலும் ஜீவா, காருக்குள் பிரேஸ்லெட் இருப்பதைப் பார்த்து அதிர்கிறான்.
கண்காணிக்கும் உருவம்
இத்தனை நேரம் தேடியும் கிடைக்காத பிரேஸ்லெட் இப்போது எப்படி வந்தது என்று விழிக்கிறான். அவனது செயல்களை எல்லாம் ஒரு அமானுஷ்ய பெண் உருவம் கவனித்துக்கொண்டே இருக்கிறது.
அந்தப் பெண் யார்?
யார் அந்த அமானுஷ்ய பெண், அவளுக்கும் ஜீவாவுக்கும் என்ன உறவு, வீட்டில் தொடர்ந்து நடக்கும் விபரீதங்களால் ஒவ்வொருவரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நோக்கி தொடர் திகிலுடன் நகர்கிறது.
இரவில் திகில் தொடர்
அமானுஷ்யம் நிறைந்திருக்கும் காதல் கதையான, ‘அனாமிகா' மெகா தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.