Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சீரியஸ் நியூஸ்' இது... 'சீரியல் டைமை ' சன் டிவி கூட்டிருச்சு தெரியுமா உங்களுக்கு???
சென்னை: எந்த சீரியலைப் போட்டாலும் ஒரே ஒப்பாரி, கூப்பாடு, ரெண்டு பொண்டாட்டி கதை, கள்ளக்காதல்.. இப்படித்தான் அக்கப்போராக இருக்கிறது. இந்த நிலையில் வெந்த புண்ணில் பெனாயிலை ஊற்றிய கதையாக சீரியல் நேரத்தை கூட்டியுள்ளது சன் டிவி.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தனது சீரியல் ஒளிபரப்பு நேரத்தை அரை மணி நேரம் கூட்டி விட்டது சன் டிவி.
முன்பு பிற்பகல் இரண்டரை மணியுடன் சீரியல்கள் முடியும். பிறகு பெரிய கேப் விட்டு மாலை முதல் இரவு வரை இழுத்துப் பிடிப்பார்கள்.. மக்களின் உணர்வுகளை.
தற்போது இரண்டரை மணி முதல் 3 மணி வரை ஒரு புது சீரியலை போட்டு முகாரி முழக்கத்தை நீட்டித்துள்ளனர்.
காலை 10.30 மணிக்கு முதல் சங்கு
காலை பத்தரை மணிக்கு முதல் சங்கை ஊதுகிறது சன் டிவி. அதாவது முதல் சீரியல் தொடங்கும் நேரம் அதுதான். அதன் பிறகு இரண்டரை மணி வரை சீரியல்கள் ஓடிக் கொண்டிருந்தன.
வள்ளியுடன் முன்பு ஓய்ந்த ஒப்பாரி
வள்ளி சீரியலுடன் முன்பு சீரியல்கள் ஓய்ந்தன. அதாவது 2.30 மணிக்கு முடிந்து விடும். பிறகு செய்தி வரும். அதன் பிறகு ஏதாவது ஒரு படத்தைப் போட்டு விட்டுப் போவார்கள்.
மாலை 5.30க்கு 2வது சங்கு
அதன் பின்னர் கேப் விட்டு மாலை 5.30 மணிக்கு அடுத்த ரவுண்டு சீரியலை ஆரம்பிப்பார்கள்.
இப்போது 3 மணி வரை ஒப்பாரி
இப்போது பிற்பகல் 3 மணி வரை சீரியல் நேரத்தை நீட்டி விட்டார்கள். 2.30 மணிக்கு நியூஸ் முடிந்தவுடன் கல்யாணப் பரிசு என்ற சீரியலை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கல்யாணப் பரிசு...
இதிலும் சோகம், சண்டை, சச்சரவு, வாக்குவாதம், வீராவேசம் என்று அனைத்து விதமான கலவைகளும் கலந்து கட்டி மக்களை டென்ஷனாக்கி வருகிறார்கள்.
சனியனைக் கூட விடலையே
முன்பு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சீரியல்களுக்கு ரெஸ்ட் கொடுத்திருந்தது சன் டிவி. சமீபத்தில் சனிக்கிழமையும் சீரியல்களை போட ஆரம்பித்தது. இப்போது சீரியல் நேரத்தையும் கூட்டி விட்டது.
இப்படியே போனால் கேப்பே இல்லாமல் கண்ணீர் வடிக்க வைப்பார்கள் போலிருக்கிறது.. !