Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பேய் கதையாக மாறிய வாணி ராணி
வாணி ராணி சீரியலின் கதைக்களம் இப்போது குற்றாலத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. குடும்பக் கதையாக அழகாக போய்க்கொண்டிருந்த கதை கடந்த சில எபிசோடுக்களாக பேய் கதை போல மாறி வருகிறது.
பூமிநாதன் - சாமிநாதன் அண்ணன் தம்பிகள் சகோதரிகளான வாணி - ராணியை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினையால் இப்போது இரண்டு குடும்பமும் தனித்தனியாக பிரிய நேரிட்டது.
ராணியின் மகள் செல்வி வாழ்க்கையில் பிரச்சினையாக இருந்த அத்தை மகள் தூக்கு போட்டு இறந்து போகிறாள். அந்த பழி செல்வி மீது விழுகிறது. அதிலிருந்து விடுவிக்கிறாள் வாணி.
குல தெய்வக் கோவில்
தென்காசி அருகில் உள்ள குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு போய் வரலாம் என பூமிநாதனின் அம்மா சொல்லவே வாணியும் சம்மதிக்கிறாள். ராணியின் குடும்பத்திடம் சம்மதம் பெற வீட்டிற்கு வருகிறான் பூமிநாதன்.
சாமிநாதனின் பிடிவாதம்
கோவிலுக்கு தன்னால் வரமுடியாது என சாமிநாதன் சொல்லவே ராணிக்கு பிரச்சினை வருகிறது. இதனால் பயந்து போன சாமிநாதன் கோவிலுக்கு வர சம்மதிக்கிறான்.
பேய் பிடிச்சிருக்கே
செல்வியின் அத்தை மகள் பேயாக மாறி செல்வியின் உடம்பில் புகுந்து கொண்டிருப்பதாக பூசாரி சொல்லவே, அதை சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்குகிறாள் செல்வியின் மாமியார்.
குற்றாலத்தில் கதை
இதுநாள் வரை சென்னையில் சுற்றி வந்த வாணி ராணி கதை இனி குற்றாலத்தை நோக்கி நகர்கிறது. குல தெய்வ கோவிலுக்கு செல்வி வருவாளா? அங்கே வாணி ராணி குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினை என்ன என்பதை இனி வரும் எபிசோடுகளில் காணலாம்.
உறவுகளுக்கு முக்கியத்துவம்
டி.வித் தொடர்கள் பெண்களை இலக்காக வைத்தே உருவாகி வருவதால், பெரும்பாலும் குடும்பப்பிரச்னைளுக்கே முதலிடம் கொடுக்கிறோம். குறிப்பாக, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியே நான் தயாரித்து நடிககிற தொடர்கள் இருந்து வருகிறது என்று வாணி ராணி பற்றி கூறியுள்ளார் ராதிகா.
பெண்களிடம் வரவேற்பு
குடும்பங்களில் நடைபெறும் அன்றாட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு அளிக்கும்வகையில் காட்சிகள் அமைக்கப்படுவதால் பெண்கள் மத்தியில் எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் அவர்களுக்கு போரடித்து விடாத வகையில் கதை மற்றும் காட்சிகளை சுவராஸ்யம் குறையாமல் நகர்த்தி வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
அதுக்காக குடும்பக் கதையை பேய் கதையாக மாற்றுவது நியாயமா?
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!