Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வாயாடியானது இப்படித்தானாம்...
சென்னை: காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் வாயை பிடுங்கி எடுப்பதோடு, அவர்களை பேசவும் விடாமல் பொரிந்து தள்ளும் திவ்யதர்ஷினிக்கு மூன்று வயது வரை பேச்சு வராமலிருந்தது என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால்.. அதுதான் உண்மையாம். இதை திவ்யதர்ஷினியே கூறியுள்ளார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக இருக்கும் திவ்யதர்ஷினி சுருக்கமாக டிடி என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது கலகலப்பான பேச்சுக்காகவே டிடி நடத்தும், காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்பாடி.. இந்த பொண்ணு வாயில மாட்டினா அவ்வளவுதான் என்று நினைக்கும் அளவுக்கு பொரிந்து தள்ளிவிடுவார் திவ்யதர்ஷினி.
தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த பெண் தொகுப்பாளினியாக விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்தார். "அவ்வளவுதான்.. இந்த பொண்ணுகிட்ட வாய் கொடுத்து மாட்டிக்கப்போராரு ஸ்ரீகாந்த்" என சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இப்படி வாயாடி என்று பெயரெடுத்த டிடிக்கு மூன்றுவயது வரை பேச்சே வராதாம்.
இதை விஜய்டிவியில் சிறந்த தொகுப்பாளினி விருது வாங்கிய பிறகு டிடியே சொன்னார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கு மூன்றுவயது வரை பேச்சே வராமல் இருந்தது. 10ம் வகுப்பு படிக்கும்வரை மேடையில் ஏறி எந்த நிகழ்ச்சியும் செய்தது கிடையாது. என் தந்தைதான் என்னை ஊக்கப்படுத்துவார். ஆனால் எனக்கு பேசத்தெரியும் என்று தெரிந்துகொள்ளாமேல அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சின்னவயசுல பேசாமல் இருந்ததால்தான் மொத்தமா சேர்த்துவச்சி இப்போ பேசுறியா தாயி..!