twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங்கில் குறும்பு செய்த அமிதாப்: கண்ணீர் விட்ட சரிகா

    By Siva
    |

    மும்பை: யுத் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கின்போது நடிகர் அமிதாப் பச்சன் செய்த குறும்பால் நடிகை சரிகா கண் கலங்கிவிட்டார்.

    பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸனின் முன்னாள் மனைவியான சரிகா யுத் என்னும் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்கள்.

    What made Sarika cry on the sets of Yudh?

    இந்த நிகழ்ச்சியில் சரிகா அமிதாபின் முன்னாள் மனைவியாக நடிக்கிறார். இந்நிலையில் அமிதாப் முகத்தில் சரிகா கோபமாக கதவை சாத்தும் காட்சி எடுக்கப்பட்டது.

    அப்போது எங்கே ஓங்கி கதவை சாத்தினால் அமிதாபுக்கு அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் சரிதா இருந்தார். அப்போது அவர் கதவை சாத்த அமிதாப் தனக்கு அடிபட்டுவிட்டது என்று கூறி வலியால் அலறினார். இதை பார்த்த சரிகா உள்ளிட்ட மொத்த யூனிட்டும் பதறிப் போனார்கள்.

    சரிகாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்துவிட்டது. கடைசியில் பார்த்தால் அமிதாப் கதவை திறந்து கொண்டு சிரித்துக் கொண்டே சும்மா விளையாடினேன் என்றார்.

    English summary
    When Amitabh Bachchan turned a prankster in the sets of TV series Yudh, Sarika cried out of fear.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X