Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த 'நாதஸ்' திருமுருகனுக்கு வேற வேலையே இல்லையா.. 'ஐடியா' அவுட்டாகிப் போச்சா!!
சென்னை: வர வர மாமியார்.. இந்தப் பழமொழி நாதஸ்வரம் இயக்குநர் திருமுருகனுக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் வர வர அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்திருக்கிறார்..
மெட்டி ஒல மூலம் ஹிட்டாகிப் போன திருமுருகன் அதற்குப் பிறகு சினிமாவுக்குப் போனார். 2 படம் கொடுத்தார். ஒன்று ஹிட்.. இன்னொன்று டவுன்.. அதன் பிறகு மீண்டும் டிவிக்கே திரும்பினார்.
இவரது இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வரும் நாடகம்தான் நாதஸ்வரம். மெகா சீரியல்.. எனவே ரொம்ப காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. நடிப்பவர்களுக்குக் கொஞ்சம் கூட போரடிக்காமல்.
ஒரே கய்யா முய்யா சத்தம்
நாதஸ்வரம் சீரியலில் சிலருடைய குரல்கள் அப்படியே எலிக்குஞ்சு கீச் கீச்சென்று கத்துமே அப்படித்தான் இருக்கிறது. பழைய ரேடியோ பொட்டியை காதுக்குள் திணித்துக் கொண்ட பீலிங் வரும் அவர்களின் கொரல்களைக் கேட்கும்போது.
மேட்டர் என்னென்னா...
திருமுருகன் மெட்டி ஒலியின்போதே ஒரு புது ஐட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது விளம்பர இடைவெளியே இல்லாமல் ஒரு எபிசோட் என்று. அது அப்போது செம ஹிட்டானது.
படத்துலேயும் அதே போல
இதைத் தொடர்ந்து தான் இயக்கிய முதல் படமான எம் மகனிலும் ஒரு பாடலை முழுவதும் இயற்கையான சத்தத்தை வைத்தே இசையமைத்து புதுமையைப் புகுத்தினார்.
அட மறுபடியும் அதே கரட்டாண்டி
இந்த நிலையில் விளம்பர இடைவெளியே இல்லாமல்.. என்ற பழைய அஸ்திரத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அட இப்பத்தானப்பா கேப்பே விடாம பேசினீங்க...
சில வாரங்களுக்கு முன்பு அதே விளம்பர இடைவெளியில்லாத ஒரு எபிசோடை ஒளிபரப்பினர்.
ஆனால் லைவ் ஆச்சே...
அதை விட முக்கியமாக அதை லைவ் ஆகவும் ஒளிபரப்பி உலக சாதனையும் படைத்தார்கள்.
மறுபடியும் கேப்பே விடாமல்
இந்த நிலையில் தற்போது மீண்டும் கேப்பே இல்லாமல் கெடா வெட்ட அதாவது எபிசோடை ஒளிபரப்பவுள்ளனர். அதாவது இன்று இரவு நாதஸ்வரம் சீரியலை பார்ப்போர், விளம்பர இடைவெளியே இல்லாமல் பார்க்க முடியுமாம்.
ஒரு வேளை நாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி பார்த்தா...
ஒரு வேளை நீங்க நாதஸ்வரம் சீரியலுக்குப் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடப் போகும் போட்டியைப் பார்ப்பதாக இருந்தால் இந்த செய்தியை இந்த ஸ்லைடோடு படிக்காமல் நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போகலாம்.
அட .. முருகா..
கேப்பே இல்லாமல் எபிசோட் ஒளிபரப்புவது, லைவ் ஆக ஷோ காட்டுவது போல வே்ற ஏதாவது புதுமையாக இருந்தால் அதை செய்யலாமே திருமுருகன்... மாறாக ஒரே ஐட்டத்தையே திரும்பத் திரும்பச் செய்தால் மக்கள் கேப் விட்டு விட்டால்...
ஏதோ மனசுக்குத் தோண்றியது... சொல்லிட்டோம்!