For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முரளிதரன் சுழலில் சுருண்டது பாகிஸ்தான்

By Super
Google Oneindia Tamil News

பழம்பெரும் நடிகை சி.டி. ராஜகாந்தம் மரணம்

சென்னை:

பழம்பெரும் நடிகையான சி.டி. ராஜகாந்தம் சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

எம்.ஜி.ஆருடன் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" உள்ளிட்ட படங்கள், சிவாஜியுடன் "பாலும் பழமும்"உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் ராஜகாந்தம்.

கடந் சில நாட்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெசன்ட் நகரில் உள்ள தன் வீட்டில்மரணமடைந்தார்.

    டிசம்பர் 02, 2002

  • பாடகர் மனோவின் தந்தை மரணம்

    சென்னை:

    பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் தந்தை ரசூல் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.அவருக்கு வயது 68.

    கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று மரணமடைந்தார்.

    பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு ரசூலின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மனோ குடும்பத்தினர்தெரிவித்தனர்.

      நவம்பர் 24, 2002

    • டாக்டர் லலிதா காமேஸ்வரன் மரணம்

      சென்னை:

      எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான டாக்டர் லலிதா காமேஸ்வரன் இன்று பகல்சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

      தமிழக அரசு திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினரான டாக்டர் லலிதா, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திராமருத்தவக் கல்லூரியின் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

      பிரபல தமிழறிஞரான சோமசுந்தர பாரதியின் மகளான டாக்டர் லலிதாவுக்கு கணவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகள்உள்ளனர்.

      அவருடைய கணவரான டாக்டர் காமேஸ்வரனும் மகன் டாக்டர் மோகனும் பிரபல காது, மூக்கு, தொண்டைநிபுணர்களாவர். மகள் டாக்டர் சித்ரா சங்கரன் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார்.

      சென்னை மருத்தவக் கல்லூரியின் முதல் டீனாகவும் இருந்த டாக்டர் லலிதா, கடந்த சில நாட்களாக உடல் நலம்சரியில்லாமல் இருந்தார்.

      இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் லலிதா மரணமடைந்தார்.

      டாக்டர் லலிதா தமிழக மருத்துவக் கல்வித் துறையின் முதல் இயக்குநராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டாக்டர் லலிதா, லண்டன்பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார்.

        நவம்பர் 09, 2002

      • அதிருப்தி தமாகா எம்.எல்.ஏ. திடீர் மரணம்

        சென்னை:

        தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மணி நாடார் இன்று சென்னையில்காலமானார். அவருக்கு வயது 66.

        கடந்த ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணைந்து விட்ட போதிலும் கிள்ளியூர் எம்.எல்.ஏவானடாக்டர் குமாரதாஸ் உள்ளிட்ட ஐந்து எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டனர்.

        மேலும் தாங்கள் தமாகாவிலேயே தொடரப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். தமாகாவின் பெயர், கொடி,சின்னம் போன்றவை காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளின் படி தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டிருந்தாலும்அந்த ஐந்து அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களாகவே கருதப்படுவார்கள்என்று சபாநாயகர் காளிமுத்து கூறிவிட்டார்.

        அந்த ஐந்து எம்.எல்.ஏக்களில் ஒருவர் தான் மணி நாடார்.

        சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு மற்றும் நீரிழிவு நோய் காரணமாக சென்னை-அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மணி நாடார் இன்று பிற்பகல் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

        அவர் இறக்கும் போது கூட டாக்டர் குமாரதாசும், மற்றொரு அதிருப்தி தமாகா எம்.எல்.ஏவான செ.கு. தமிழரசனும்மணி நாடாரின் அருகிலே தான் இருந்தனர்.

        மணி நாடாருக்கு ஜானகி என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். களக்காடு ஊராட்சி ஒன்றியத்தலைவராக உள்ளார் ஜானகி.

        மணி நாடாரின் உடல் சாத்தான்குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நாளை அங்கு அவருடைய இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

        கடந்த 1996 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் சாத்தான்குளம் தொகுதியில்போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றவர் மணி நாடார்.

          நவம்பர் 06, 2002

        • எழுத்தாளர் கு.பா. சேது அம்மாள் மரணம்

          சென்னை:

          பிரபல எழுத்தாளர் கு.பா.ராஜகோபாலனின் சகோதரியும், எழுத்தாளருமான கு.ப.சேது அம்மாள் சென்னையில்நேற்று மரணமடைந்தார்.

          அவருக்கு வயது 94. பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

          அவரது படைப்புகள் அனைத்தும் தமிழக அரசினால் சமீபத்தில்தான் நாட்டுடமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

            நவம்பர் 03, 2002

          • காமராஜரின் சீடர் மரணம்

            சென்னை:

            காமராஜரின் தீவிர சீடரும், தமிழக ஐக்கிய ஜனதாதள துணைத் தலைவருமான டி.எஸ்.திருமால் யாதவ்வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

            காமராஜரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் திருமால்.

            காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம் என பல கட்சிகளில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்திருமால் இவர்.

              அக்டோபர் 30, 2002

            • "நம்மவர்" இசையமைப்பாளர் மகேஷ் மரணம்

              சென்னை:

              கமல்ஹாசன் நடித்த "நம்மவர்" படத்திற்கு இசையமைத்த மகேஷ், புற்றுநோய் காரணமாக சென்னையில்மரணமடைந்தார்.

              பெங்களூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் மகேஷ், மற்றொரு கமல் படமான "குருதிப்புனல்" என்ற படத்திற்கும்இசையமைத்துள்ளார்.

              நீண்ட காலமாக இவருக்கு புற்றுநோய் இருந்து வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு நோய் தீவிரமானது.

              இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ரமேஷ்சேர்க்கப்பட்டார்.

              ஆனால் அங்கு சிகிச்சை பலன் தராமல் நேற்று அதிகாலை மகேஷ் இறந்தார்.

              இசையில் நிறைய திறமை இருந்தும் புற்று நோய் காரணமாக திரைப்படங்களுக்கு இசையமைக்கால் இருந்தார்மகேஷ். ஓரிரு விளம்பரப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்தார்.

                அக்டோபர் 28, 2002

              • வாழப்பாடி ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்

                சென்னை:

                மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி சென்னையில்மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.

                நேற்று மாலை 3.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

                மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

                வாழப்பாடி ராமர்த்திக்கு மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி சேலம் மாவட்டம்வாழப்பாடியில் வசித்து வருகிறார்.

                வாழப்பாடி ராமமூர்த்தியை பார்த்து விட்டு சனிக்கிழமை தான் ஊருக்குத் திரும்பினார். அவரது மகளும்,மகன்களும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

                அவரது உடல் அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள வாழப்பாடியாரின் வீட்டில் பொதுமக்கள் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளது. நாளை சொந்த ஊரான வாழப்பாடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்குஎரியூட்டப்படுகிறது.

                  அக்டோபர் 15, 2002

                • காஞ்சி சங்கராச்சாரியாரின் தாயார் மரணம்

                  சென்னை:

                  காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தாயாரான சரஸ்வதி அம்மாள் சென்னையில்மரணமடைந்தார். அவருக்கு வயது 84.

                  சென்னையில் வசித்து வந்த சரஸ்வதி அம்மாளுக்கு ஸ்ரீஜெயேந்திரர் தவிர, விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணன்என்ற இரு மகன்களும் உள்ளனர்.

                  அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் இடுகாட்டில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

                  சரஸ்வதி அம்மாளின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார். தனது இரங்கல் செய்தியில்,ஸ்ரீஜெயேந்திரர் போன்ற துறவியைக் கொடுத்த சரஸ்வதி அம்மாளின் மறைவு தன்னை சோகப்படுத்தியுள்ளதாகஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

                    செப்டம்பர் 03, 2002

                  • "புரட்சி பாரதம்" தலைவர் பூவை மூர்த்தி மரணம்

                    சென்னை:

                    சென்னையைச் சுற்றியுள்ள சில வட மாவட்டங்களில் தலித் மக்களிடையே ஓரளவு செல்வாக்குடன் இருக்கும்"புரட்சி பாரதம்" கட்சியின் தலைவர் பூவை. மூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

                    சென்னையை அடுத்துள்ள வெள்ளவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவை மூர்த்தி. வழக்கறிஞரான இவர் "புரட்சிபாரதம்" என்ற கட்சியை நடத்தி வந்தார்.

                    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தலித் மக்களிடையே ஓரளவுசெல்வாக்குடன் இருந்தவர்.

                    இவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனி விஜயா மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

                    ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் வழக்கமாகப் போட்டியிட்டு கணிசமானவாக்குகளைப் பெறக் கூடியவர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

                    மூர்த்தியின் மறைவையடுத்து வெள்ளவேடு பகுதியில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

                      செப்டம்பர் 02, 2002

                    • கவிஞர் மீரா காலமானார்

                      சிவகங்கை:

                      கவிஞர் மீரா காலமானார்.

                      மீரா என்று அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் மீ.ராஜேந்திரன். அவருக்கு வயது 65. சிவகங்கை ஆர்.டி.எம். கல்லூரியில்தமிழ்துறை பேராசிரியராகவும் கல்லூரியின் பொறுப்பு முதல்வராகவும் இருந்தவர் அவர்.

                      திராவிட இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். அண்ணாவால் வாழ்த்தப்பட்டவர். பல்வேறு கவிதை நூல்களையும் இலக்கியநூல்களையும் எழுதியவர் மீரா.

                        ஆகஸ்டு 28, 2002

                      • காலமானார் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்

                        கம்பராமாயணத்தில் சிறந்த சொற்பொழிவாளரான பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு வயது 86. அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.

                        திருச்சி மாவட்டம் அரசங்குடியைச் சேர்ந்தவர் ஞானசம்பந்தன். அவரது தந்தையும் சிறந்த தமிழறிஞர்.

                        துவக்க நிலைக் கல்வியில் இயற்பியலையும், கணிதத்தையும் படித்த ஞானசம்பந்தன், மேற்படிப்பில் தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார்.

                        சென்னை பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

                        இந்திய இலக்கியத்தின் புகழ்மிக்க "சாகித்திய அகாதமி" விருதைப் பெற்றுள்ள ஞானசம்பந்தன், 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

                          ஆகஸ்டு 26, 2002

                        • பாகவதரின் மகன் மரணம்

                          சென்னை:

                          சிறந்த தமிழறிஞரும், பக்தி சொற்பொழிவாளருமான அ.ச. ஞானசம்பந்தன் சென்னையில் மரணமடைந்தார்.

                          அந்தக் கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகன் எம்.கே.டி. ரவீந்திரன் சென்னையில் காலமானார்.அம்பத்தூர் ராம் நகர் பகுதியில் வசித்து வந்த ரவீந்திரனுக்கு வயது 63. மாரடைப்பு காரணமாக அண்ணா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.ரவீந்திரனுக்கு, கெளசல்யா என்ற மனைவியும், பிரமிளா என்ற மகளும், தனசேகர் என்ற மகனும் உள்ளனர்.

                            ஆகஸ்டு 20, 2002

                          • பழம் பெரும் நடிகை ரிஷியேந்திர மணி மரணம்

                            சென்னை:

                            பழம் பெரும் நடிகை ரிஷியேந்திர மணி சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 88.

                            1935ம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கியவர் ரிஷியேந்திர மணி. சில காலம் ஹீரோயினாகநடித்துள்ள இவர் எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி படங்களில் நிறைய நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருக்குஅம்மாவாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

                            "குலேபகாவலி", "எங்க வீட்டுப் பிள்ளை", "மாயா பஜார்", "மிஸ்ஸியம்மா" ஆகியவை இவர் நடித்துப் புகழ் பெற்றசில படங்கள்.

                            நீரிழிவு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார் ரிஷியேந்திர மணி. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் ரிஷியேந்திர மணி.

                            இவரது மகள் பவானியும் ஒரு நடிகைதான். நடிகர் சிவகுமார் நடித்த "பத்ரகாளி" என்ற படத்தில் அவர்ஹீரோயினாக நடித்துள்ளார்.

                              ஜூன் 15, 2002

                            • மறைந்தார் சொல் விளங்கும் பெருமாள்

                              மதுரை:

                              பிரபல இலக்கியப் பேச்சாளர் சொல் விளங்கும் பெருமாள் மதுரையில் இன்று (சனிக்கிழமை) காலமானார்.

                              மதுரையைச் சேர்ந்தவர் சொல் விளங்கும் பெருமாள். மிகச் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.

                              இவரது மனைவி சக்தி பெருமாளும் சிறப்பான பேச்சாளர்.

                              மதுரை மாநகராட்சி கவுன்சிலராகவும் இவர் இருந்துள்ளார்.

                              சொல்விளங்கும் பெருமாள் மதுரையில் சனிக்கிழமை காலை இறந்தார்.

                              மே 02, 2002

                            • கனகாவின் தாயார் நடிகை தேவிகா மரணம்

                              சென்னை:

                              பழம்பெரும் தென்னிந்திய மொழி நடிகை தேவிகா மாரடைப்பால் சென்னையில் நேற்று (மே 1, 2002)மரணமடைந்தார். அவருக்கு வயது 58.

                              கடந்த ஏப்ரல் 26ம் தேதியிலிருந்தே நெஞ்சுவலியால் துடித்து வந்த தேவிகாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

                              ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தேவிகா மரணமடைந்தார்.

                              "முதலாளி" என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தேவிகா, "நெஞ்சில் ஓர் ஆலயம்", "ஆண்டவன்கட்டளை", "ஆனந்த ஜோதி" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

                              1960களில் தமிழ் சினிமாவின்முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தேவிகா, அப்போதைய திரையுலகஜாம்பவான்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன் ஆகிய நடிகர்களுடன்இணைந்து நடித்தவர்.

                              தமிழ் தவிர தாய் மொழியான தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் 150 படங்களில் தேவிகா நடித்துள்ளார்.

                              தேவிகாவின் மகள் நடிகை கனகா என்பது குறிப்பிடத்தக்கது. தேவிகாவின் இறுதிச் சடங்குகள் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.

                              பிப்ரவரி 12, 2002

                            • மதிமுக துணைப் பொதுச் செயலாளர் உடல் அடக்கம்

                              சென்னை:

                              மரணமடைந்த மதிமுக துணைப் பொதுச் செயலாளர் குடியரசுவின் உடல் இன்று (புதன்கிழமை) அடக்கம்செய்யப்பட்டது.

                              72 வயதான குடியரசு, சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல்குடியரசு மரணமடைந்தார்.

                              இவருடைய உடல் அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. திமுக தலைவர்கருணாநிதி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தார். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

                              ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குடியரசுவின் மறைவுசெய்தி கேட்டவுடன் சென்னை திரும்பினார். இன்று அசோக் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலிசெலுத்தினார்.

                              பின்னர் குடியரசுவின் ஊர்வலம் அசோக் நகரிலிருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் வைகோ, மத்தியஅமைச்சர்கள் செஞ்சி.ராமச்சந்திரன், மு. கண்ணப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

                              அவரது உடல் வடபழனியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு வைகோ தலைமையில் இரங்கல்கூட்டம் நடத்தப்பட்டது.

                              பிப்ரவரி 12, 2002

                            • மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மரணம்

                              சென்னை:

                              மதிமுக துணைப் பொதுச் செயலாளரான குடியரசு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மரணமடைந்தார். அவருக்குவயது 72.

                              சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் குடியரசு சிகிச்சை பெற்று வந்தார்.

                              இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் குடியரசு மரணமடைந்தார்.

                              சிறந்த கவிஞராகவும் விளங்கிய குடியரசுவின் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன்னுடையஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

                              திமுக தலைவர் கருணாநிதியும் கவிஞர் குடியரசுவின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபவங்களைத் தெரிவித்துள்ளார்.

                            • ஜனவரி 22, 2002

                              சொக்கலிங்க பாகவதர் மரணம்

                              சென்னை:

                              நடிகர் சொக்கலிங்க பாகவதர் நேற்று (திங்கள்கிழமை) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

                              தமிழ்த் திரைப்படங்களில் அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் சொக்கலிங்க பாகவதர்.

                              வீடு, இந்தியன், சந்தியா ராகம் உள்பட பல படங்களில் சொக்கலிங்க பாகவதர் நடித்துள்ளார்.

                              சமீபத்தில் சொக்கலிங்க பாகவதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை அவர்மரணமடைந்தார்.

                              அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது. சிதைக்கு அவருடைய மகன் காந்தி தீ மூட்டுகிறார்.

                            • தட்ஸ்கிரிக்கெட்.காம் புள்ளிவிவர நிபுணர் காலமானார்

                              பெங்களூர்:

                              தட்ஸ்கிரிக்கெட்.காம் இணையதளத்திற்காக கிரிக்கெட் புள்ளிவிவர நிபுணராகப் பணியாற்றி வந்த சி.வி.நாகேந்திரநாத் இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 50.

                              இவர் அகில இந்திய கிரிக்கெட் ஸ்கோர் வாரிய உறுப்பினராகவும் இருந்தவர்.

                              சிறந்த கிரிக்கெட் அம்பயரான இவர் கர்நாடகா கிரிக்கெட் அம்பயர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். 1996ல்நாகப்பூர், கான்பூர், டெல்லியில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்கோரராகவும், புள்ளி விவரம்சேகரிப்பவராகவும் பணியாற்றினார்.

                              கடந்த புதன்கிழமையன்று உடல்நலம் சரியில்லாமல் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், நினைவுத் திரும்பாமலேயே இன்று காலை காலமானார்.

                            • கடந்த ஆண்டில் உயிர் நீத்த கலையுலக சகாப்தங்கள்

                              நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

                              திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன்.

                              நடிகர் ஜெய்கணேஷ்.

                              வசன கர்த்தா அறந்தை நாராயணன்.

                              இயக்குநர் திருப்பதி சாமி.

                              இயக்குநர் மணி வாசகம்.

                              தமிழ்த் திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி.

                              டிசம்பர் 17, 2001

                            • காலமானார் அப்துல் லத்தீப்

                              சென்னை:

                              இந்திய தேசிய லீக் தலைவர் எம். அப்துல் லத்தீப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாரடைப்பினால்மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

                              கடந்த நான்கு ஆண்டுகளாகவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தால் அப்துல் லத்தீப். இந்நிலையில் நேற்றுகாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

                              உடனே அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.

                              இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணிக்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருடையஉடல் உடனடியாக அவருடைய சொந்த ஊரான வாணியம்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

                              வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அப்துல் லத்தீப், நான்கு முறை தமிழக சட்டசபைக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

                              ரம்ஜான் தினமான இன்று (டிச.17) அப்துல் லத்தீப் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                              டிசம்பர் 06, 2001

                            • முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் மரணம்

                              சென்னை:

                              தமிழக முன்னாள் அமைச்சரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 78.

                              கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த எஸ்.டி.எஸ். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

                              இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவர் காலமானார். அவருக்கு மனைவியும் இரு மகன்களும்உள்ளனர்.

                              அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்த எஸ்.டி.எஸ்., கடந்த 1967ல் தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலில்முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைத் தோற்கடித்து திமுக சார்பில் எம்.பி. ஆனார்.

                              பின்னர் அதிமுகவில் சேர்ந்த எஸ்.டி.எஸ்., எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1984ல் நமதுகழகம் என்ற கட்சியை உருவாக்கினார். பின்னர் மீண்டும் அதிமுகவிலேயே இணைந்தார்.

                              தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.டி.எஸ்., எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதாஆட்சிக் காலத்திலும் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

                              முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், கார் படியிலும் வேன் படியிலும் நின்று தொங்கிக் கொண்டே பயணம்செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் எஸ்.டி.எஸ்.

                              பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் என்றகட்சியை எஸ்.டி.எஸ். தொடங்கி நடத்தி வந்தார்.

                              அவருடைய உடல் தற்போது சென்னை-ஈக்காடுதாங்கலில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று எஸ்.டி.எஸ்சின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

                              அக்டோபர் 27, 2001

                            • காங். மூத்த தலைவர் மரகதம் சந்திரசேகர் மரணம்

                              சென்னை:

                              காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

                              85 வயதான மரககதம் சந்திரசேகர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

                              மரகதம் சந்திரசேகர் சென்னை அருகே உள்ள பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மயிலாடுதுறை எம்.பியாக ஒருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                              காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர், கட்சியின் பொதுச் செயலாளராகவும், பொருளாளராகவுமஇருந்துள்ளார்.

                              இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தியின் அன்பயும் பெற்றிருந்தார்.

                              சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார்.

                              செப்டம்பர் 14, 2001

                            • பழம்பெரும் நடிகர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி மரணம்

                              சென்னை:

                              பழம்பெரும் நடிகர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

                              அக்காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் "விகடம்" கிருஷ்ணமூர்த்தி.

                              அவருக்கு வயது 89. நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் வியாழக்கிழமைஇறந்தார்.

                              கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

                            • செப்டம்பர் 07, 2001

                            • தமிழக மனித உரிமை கமிஷன் தலைவர் மரணம்

                              சென்னை:

                              தமிழக மனித உரிமை கமிஷனின் தலைவரான நீதிபதி நயினார் சுந்தரம் இன்று (வெள்ளிக்கிழமை)காலைமரணமடைந்தார். அவருக்கு வயது 69.

                              நீதிபதி நயினார் சுந்தரம் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால்,சிகிச்சைக்காக சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார்.

                              இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரதுஉறவினர்கள் தெரிவித்தனர்.

                              குஜராத் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் நீதிபதி நயினார் சுந்தரம். இவர்சிறிது காலம் சென்னை உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                              நீதிபதி நயினார் சுந்தரம் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்தார்.

                            • ஆகஸ்டு 20, 2001

                            • காமராஜரின் உதவியாளர் மரணம்

                              சென்னை:

                              பெருந்தலைவர் காமராஜரிடம் உதவியாளராக பணிபுரிந்த வெங்கட்ராமன் ஞாயிற்றுக்கிழமை சென்னையில்காலமானார். அவருக்கு வயது 83.

                              இதுகுறித்து அறிந்ததும், அவருடன் நீண்ட காலம் பணியாற்றியவரான தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், வெங்கட்ராமனின் வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

                              காமராஜரின் உதவியாளராக மட்டுமில்லாமல், காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பல்வேறு சேவைகளைச் செய்துவந்தவர் வெங்கட்ராமன்.

                              சமீபத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவரது மகனும் சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலின்வீட்டில் போலீஸார் அத்துமீறி விசாரணை நடத்தியதாககக் கூறப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கை நயினார்சுந்தரம்தான் விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                            • ஜுலை 06, 2001

                            • கார் விபத்தில் பிரேம்குமார் வாண்டையார் மரணம்

                              சென்னை:

                              விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்களில்ஒருவரான பிரேம்குமார் வாண்டையார் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்.

                              அவருக்கு வயது 46.

                              சிதம்பரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் வாண்டையார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவர்.

                              இவர் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கடந்த வாரம் தனது காரில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார்.அவரது கார் திருமண வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதிவிபத்துக்குள்ளானது.

                              இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரேம்குமார் வாண்டையார் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

                              அங்கு கைதேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றிபிரேம்குமார் வாண்டையார் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார்.

                            • ஜூன் 26, 2001

                            • தொழிற்சங்க தலைவர் ராமானுஜம் மறைந்தார்

                              சென்னை:

                              பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், கோவா, ஒரிசா மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான ஜி.ராஜாமனுஜன் சென்னையில்செவ்வாய்க்கிழமை காலமானார்.

                              84 வயதாகும் ராமானுஜம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். சுதந்திரப் போராட்ட காலத்தில் பலபோராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

                              தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்தியதேசிய தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பில் பல காலம் தலைவராக இருந்தவர்.

                              ராமானுஜம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா, தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர்இரங்கல் தெரிவித்துள்ளனர்.

                            • ஜூன் 21, 2001

                            • திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் மறைந்தார்

                              சென்னை:

                              திரை இசைத் திலகம் என்று போற்றப்பட்ட பழம் பெரும் திரைப்பட இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் (83)சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

                              வியாழக்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

                              மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு முன்பே பிரபலமாக இருந்தவர் மகாதேவன்.திரை இசையில் கர்நாடக சங்கீதம் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய காலத்தில் கர்நாடக இசையை பாமரர்களும்கேட்கும் விதத்தில் இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.

                              திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை,வசந்த மாளிகை என பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

                              கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப்பெற்றுள்ளார்.

                              தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்குஇசையமைத்துள்ளார் கே.வி.மகாதேவன்.

                            • மார்ச் 01, 2001

                            • பக்தவச்சலம் மகன் மரணம்

                              சென்னை:

                              முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலத்தின் மகன் சித்தரஞ்சன் (70) சென்னையில் வியாழக்கிழமை இறந்தார்.

                              சிறிது காலமாக அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தார். அவரது உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

                            • தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணம்

                              சென்னை:

                              பிரபல தமிழ் பத்திரிக்கை தினமணியின் முன்னாள் ஆசிரியர் ஏ. என்.சிவராமன் மாரடைப்பு காரணமாக வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.

                              அவருக்கு வயது 96. சிவராமனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர் தினமணி பத்திரிக்கையின் ஆசிரியராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.இவரைப்போல் 50 ஆண்டு காலம் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக தமிழகத்தில் யாரும் இல்லை எனலாம். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த இவருக்குபுதன்கிழமை இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

                              இதையடுத்து, இவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வென்டிலேட்டரில் புதன்கிழமை இரவு முழுவதும் வைக்கப்பட்டிருந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு மரணமடைந்தார்.

                              சிவராமன் பல துறைகள் குறித்து புத்தகங்கள் எழுதியுள்ளார். 1987 ல் தினமணி பத்திரிக்கையிலிருந்து ஓய்வு பெற்ற பின் வேதபாடங்கள் கற்கத்தொடங்கினார். அவர் திருக்குரானால் அதிகம் ஈர்க்கப்பட்டவர். இவர் சுதந்திர போராட்ட வீரர்.

                              முதல்வர் இரங்கல்:

                              தினமணி முன்னாள் ஆசிரியர் சிவராமன் மரணமடைந்ததற்கு, முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில், தமிழ்பத்திரிக்கை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சிவராமன். குறிப்பாக தினமணி பத்திரிக்கை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் என்று கூறியுள்ளார்முதல்வர்.

                              யு.என்.ஐ.

                            • பிப்ரவரி 10, 2001

                            • மறைந்தார் சாவி

                              சென்னை:

                              பிரபல பத்திரிகையாசியரும், எழுத்தாளருமான சாவி சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

                              கடந்த மாதம், சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசியசாவிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                              அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை வெள்ளிக்கிழமை மோசமடைந்தது. இரவு 8 மணிவாக்கில் அவர் இறந்தார்.

                              சாவிக்கு வயது 85. இருந்தும் கூட சுறுசுறுப்பாக தனது பத்திரிக்கைப் பணியையும், எழுத்துப் பணியையும்தொடர்ந்து கவனித்து வந்தார். முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்.

                              வாஷிங்டனில் திருமணம் என்ற பிரபலமான நாவலை எழுதியவர் சாவி. தமிழ்ப் பத்திரிகையுலகிற்கு அவரதுசேவை மகத்தானது. நல்ல, பல செய்தியாளர்களை, ஆசிரியர்களை உருவாக்கியவர்.

                              சாவியின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரிலுள்ள மின்சார மயானத்தில் சனிக்கிழமை பிற்பகல்நடைபெறும்.

                            • பிப்ரவரி 09, 2001

                            • எழுத்தாளர் பகீரதன் மறைந்தார்

                              பிரபல எழுத்தாளர் பகீரதன் சென்னையில் புதன்கிழமை காலமானார்.

                              தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த பகீரதனுக்கு வயது 81. கல்கிபத்திரிகையில் தனது எழுத்துலக பணியைத் தொடங்கியவர். பல ஆன்மீககதைகள்,தொடர்களை எழுதியுள்ளார்.

                              பல்வேறு ஆன்மீக நூல்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு மகன், 2மகள்கள் உள்ளனர்.

                              ஜனவரி 20, 2001

                            • மயிலாடுதுறை எம்.எல்.ஏ. மரணம்

                              தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வுமான அபுல் ஹசன் வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

                              அபுல் ஹனுக்கு வயது 72. இவருடைய உடலில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் அதற்கான பரிசோதனை செய்ய கடந்த 17 ம் தேதி இருதயஅறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அபுல் ஹசனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குஅவர் உயிர் பிரிந்தது.

                              தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் மருத்துவமனைக்குச் சென்று அபுல் ஹசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

                              எம்.எல்.ஏ. அபுல் ஹசனின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல்அடக்கம் சனிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் மேலத்தெரு ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெறுகிறது.

                              நவம்பர் 07, 2000

                            • பாரத ரத்னா சி.எஸ். மறைந்தார்

                              பாரத ரத்னா விருது பெற்றவரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர கவர்னருமான சி. சுப்ரமணியம் சென்னையில் செவ்வாய் கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

                              சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த அவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

                              சி.எஸ் என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி.சுப்ரமணியம் கடதந்த 1910-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி பொள்ளாச்சியில் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலில் பட்டப்படிப்பையும், தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.

                              காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட அவர் காங்கிரசில் இணைந்தார். 1936 ம் ஆண்டு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை அவர் தொடங்கினார். பின்னர் தனது நேர்மையான அரசியலாலும், ஆற்றலாலும் படிப்படியாக உயர்ந்தார். நாடு முழுவதும் அறிந்த தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

                              1946-51-ம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசியல் சட்ட நிர்ணய சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக சி.எஸ் பொறுப்பேற்றார். பசுமைப் புரட்சி என்ற புரட்சிகரத் திட்டத்தை கொண்டு வந்து நாடு விவசாய வளம் பெற வழிவகை செய்தார்.

                              தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக பணியாற்றி பல தொழில் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். 1979-80ம் ஆண்டில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். 1990-ம் ஆண்டு முதல் 93-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

                              பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்தார். அதன் பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கி பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும ஊழல் ஒழிப்பு குறித்து தவறாமல் குறிப்பிட்டு வந்தார்.

                              தமிழகத்தில் தி.மு.க.- த.மா.கா. கூட்டணி ஏற்படுவதற்கு பாலமாக இருந்தார். ஜெயலலிதாவையும், அவரது ஊழலையும் கடுமையாக எதிர்த்து வந்த சி.எஸ்., அதற்காக தி.மு.க., - த.மா.கா. கூட்டணி தொடர வேண்டும் என்று பகிரங்கமாக பேசி வந்தார். அவர் கடைசி வரையில் தமிழக காங்கிரஸ் டிரஸ்ட் உறுப்பினராக இருந்து வந்தார்.

                              தமிழகத்தில் கல்வித்துறைக்கு சி.சுப்ரமணியம் ஆற்றியத் தொண்டுகள் பல. இவர் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

                              மதிய உணவுத் திட்டம், தமிழ் மொழி மூலம் பயிற்றுவித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்காக அதிக முயற்சிகள் எடுத்தார்.

                              அரசியல் மட்டுமல்லாது வேறு பல துறைகளிலும் விருப்பம் கொண்டவர் சி.எஸ். 1990ம் ஆண்டு முதல் பாரதீய வித்யா பவன் தலைவராக இருந்தார். மெக்ஸிகோவிலிருந்து செயல்படும் கோதுமை மற்றும் மக்காச் சோள ஆய்வுக் கழகத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

                              ஐ.நா. சபையின் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்காக ஒருமுறை அவரை ஐ.நா. பொதுச் செயலாளர் அழைத்திருந்தார்.

                              பல்வேறு புத்தகங்களையும் சி.எஸ்.எழுதியுள்ளார். பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

                              முதல்வர் இரங்கல்:

                              சிதம்பரம் சுப்ரமணியம் என்ற முழுப் பெயரை கொண்ட சி.எஸ். மறைவு செய்தி கேட்டு தமிழக முதல்வர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார் மற்றும் பல தலைவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று சி.எஸ்.சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

                            • அக்டோபர் 27, 2000

                            • நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.சேதுராமன்

                              பிரபல நாதஸ்வர கலைஞரும், கலைமாமணி விருது பெற்றவருமான எம்.பி.என்.சேதுராமன் (67) மதுரையில், வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.

                              பிரபல நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.பொன்னுச்சாமியின் சகோதரர் சேதுராமன். எம்.பி.என். சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட இருவரும், தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட தங்களது நாதஸ்ரவத் திறமையால் அறியப்பட்டவர்கள.

                              ஒரு மாதத்திற்கு முன்பு சேதுராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

                              சிகிச்சை பலனளிக்காது வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். சேதுராமனுக்கு மனைவி, ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.

                              சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சேதுராமன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

                            • அக்டோபர் 25, 2000

                            • சீதாராம் கேசரி

                              காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்திய அரசியலில் மறக்க முடியாதவருமான சீதாராம் கேசரி செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

                              84 வயதாகும் சீதாராம் கேசரி நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

                              கேசரிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மனைவி முன்பே மரணமடைந்து விட்டார். கால் முறிவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கேசரி அக்டோபர் 12-ம் தேதி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                              ஆறு நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்பட்டதால், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே அவர் இருந்தார்.

                              காங்கிரஸ் கட்சியின் தலைவராக இவர் இருந்தபோது, பல அரசியல் சூறாவளியை இந்திய அரசியல் சந்தித்தது. இந்திரா காந்தியால் அரசியலுக்கு வந்தவர் கேசரி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

                              1976-ம் ஆண்டு பீகார் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன் பிறகு அவருக்கு தோல்வியே கிடைத்ததில்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் உயர்ந்தபோது, கட்சியின் பெயர் படுமோசமான நிலையில் இருந்தது.

                              16 ஆண்டுகள் கட்சியின் பொருளாளராக இருந்த கேசரி, 1996-ம் ஆண்டு கட்சித் தலைவரானார். பின்னர் நரசிம்மராவை லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

                              தொண்டர்களின் ஆதரவு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவே கேசரிக்கு இருந்தது. ஒரே ஒரு முறை மட்டுமே அவர் லோக்சபா தேர்தலில் (1971, கத்தியார் தொகுதி) வெற்றி பெற்றார். அதன் பிறகு பலமுறை ராஜ்சயபா எம்.பி.யாக இருந்துள்ளார்.

                              1997-ம் ஆண்டு பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக கடுமையாக முயன்றார்.ஆனால் அதற்கு ஐக்கிய முன்னணியும், காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைப்பு தராததால் அவரது ஆசை நிராசையானது.

                            • செப்டம்பர்24, 2000

                            • எழுத்தாளர் ரகமி

                              பிரபல எழுத்தாளர் ரகமி என்ற ரங்கசாமி சனிக்கிழமை சென்னையில் காலமானார்.

                              ரகமிக்கு வயது 70. அண்ணாசாலையில், உள்ள ஒரு தியேட்டரில் பாரதி படம்பார்ப்பதற்காக நண்பர் ஒருவருடன் சென்றிருந்தார். மதியக் காட்சி துவங்குவதற்கு முன்நண்பரிடம் சிறிது உடல்நிலை சரியில்லை என்று கூறிய சில நிமிடங்களில் இறந்தார்.

                              திருவல்லிக்கேணியில் உள்ளஅவரது வீட்டிற்கு சடலம் கொண்டு வரப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.

                              மறைந்த எழுத்தாளர் ரகமி முன்பு சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றியவர்.பாரதி, வாஞ்சிநாதன் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்ட வரலாறுதொடர்பான கட்டுரைகள் எழுதியவர்.

                              கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் காரணமாக சிரமப்பட்டு வந்தார் ரகமி.இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி மட்டும் இருக்கிறார்.

                            • செப்டம்பர் 06, 2000

                            • விஸ்வநாதன் செட்டியார்

                              தேவகோட்டை கண்ணாடியார் வீடு அ.சி.தெ.தெ. விஸ்வநாதன் செட்டியார் கடந்த 5ம் தேதி காலமானார்.

                              அவருக்கு வயது 85. தேவகோட்டையில் அவரது இல்லத்திலேயே அவர் இறந்தார்.

                              அவருக்கு மனைவி, 4 மகள்கள் உள்ளனர்.

                            • ஆகஸ்ட் 23, 2000

                            • ரங்கராஜன் குமாரமங்கலம்

                              மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

                              மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ரத்தப் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

                              கடந்த 12 ம் தேதி டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

                              அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை அமைச்சருக்கு ரத்த ஓட்டத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.

                              அதற்குப் பின் செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லை. நினைவு திரும்பாத நிலையில் உயிர்காக்கும் கருவிகளின் துணையோடுஅமைச்சர் ரங்கராஜன் உயிருக்குப் போராடி வந்தார்.

                              டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. இதற்கிடையே நினைவு திரும்பாமலேயே அமைச்சர் ரங்கராஜன் புதன்கிழமை அதிகாலை4.30 மணிக்கு மரணமடைந்தார்.

                            • ஆகஸ்ட் 18, 2000

                            • இசைக் கலைஞர் எஸ். கோபால கிருஷ்ணன்

                              தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் வித்வான் எஸ். கோபால கிருஷ்ணன் (வயது 82) டெல்லியில் காலமானார்.

                              டெல்லி அகில இந்திய வானொலியில் இசை அமைப்பாளராக பணியாற்றியவர். பண்டிட் ரவி சங்கர், டி.கே. ஜெயராம அய்யர்ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

                              காலமான கோபால கிருஷ்ணனுக்கு ஒரு மகன் உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X