தமிழகத்தில் இன்று
குண்டுவெடிப்புக் கைதிகளை ஒரே அறையில் அடைக்கக் கோரிக்கை
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அனைவரையும் சிறையில் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்றுஅல் உம்மா தலைவர் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாகஅல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில்அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் அப்துல் நாசர் மதானி ஆகியோர்உள்பட 166 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு, விசாரணைத் துவக்க நிலையில் உள்ளது. இந்நிலையில்செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் தவிர 166 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நீதிபதி தணிகாசலம், வக்கீல்கள் நியமித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததுடன், அனைவரும்சிறையில் தனித்தனி அறையில் அடைப்பதற்கும் உத்தரவிட்டார்.
ஆனால், பாட்ஷா உள்பட சிலர், வக்கீல்கள் நியமிக்க வேண்டுமானால், நாங்கள் அனைவரும் கலந்து ஆலோசனைசெய்ய வேண்டும். எனவே, எங்களை சிறையில் தனித் தனி அறையில் அடைக்கக் கூடாது. ஒரே அறையில்அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை நீதிபதி தணிகாசலம் நிராகரித்து விட்டார். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.