தமிழகத்தில் இன்று
இந்தியாவும், பாகிஸ்தானும் பேச சீனா விருப்பம்
இஸ்லாமாபாத்:
இந்தியாவும், பாகிஸ்தானும் கருத்து வேறுபாடுகளை மறந்து பிரச்சினைகளைத் தீர்க்கபேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் டாங் ஜியாசுவான்கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த டாங்இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமேஎந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும். அதுவே சரியான பாதையாகவும் இருக்கமுடியும். எந்தச் சூழ்நிலையிலும் படை பலத்தைப் பயன்படுத்துவதை இரு நாடுகளும்தவிர்க்க வேண்டும்.
கடந்த முறை டெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் பேசுகையில், இந்தியா,பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டால், தெற்காசியாவில் அமைதி நிலவும்என்பதை வலியுறுத்தினேன்.
இந்தியாவுடனான பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண முயற்சிப்பதாகபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் உறுதியளித்தார் என்றார் டாங்.