ஜெ. வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு
சென்னை:
சென்னையில் டான்சி நிலப்பேரல் ஊழல் வழக்கை விசாரித்து வரும் தனிநீதிபதி அன்பழகனுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது நடந்த முறைகேடுகளை விசாரிக்க மூன்று தனிநீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டன.
இதில் மூன்றாவது தனிநீதிமன்ற நீதிபதி அன்பழகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீதான டான்சி நில பேரல் ஊழல் வழக்கை விசாரித்து வருகிறார்.
இம்மாதம் 31 ம் தேதியுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது. அவர் 2002 ம் ஆண்டு ஜூலை மதம் வரை பதவியில் நீடிப்பார்.


















