தமிழகத்தில் இன்று
அப்பாவுக்குப் பிறந்தநாள் ... மரம் நட்டார் மகன்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் பிறந்தநாளையொட்டி, அவரது மகன் அன்புமணிசென்னையில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
செவ்வாய்க்கிழமை பா.ம.க நிறுவனர் ராமதாசுக்குப் பிறந்தநாள். வழக்கமாக இவர் பிறந்தநாளைக்கொண்டாடுவதில்லை. இந்த பிறந்த நாளிலும், வழக்கம் போல் கடலூர் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ளஓய்வெடுத்து வந்தார்.
இருப்பினும் ராமதாஸின் பிறந்தநாளை, அவரது மகன் அன்புமணி தலைமையிலான பசுமை தாயகம் அமைப்புவிமரிசையாக கொண்டாடியது. அதன் சார்பில் சென்னை உள்பட பல இடங்களில் சுமார் ஒரு லட்சம்மரக்கன்றுகளை நடப்பட்டது.
சென்னையில் அன்புமணி இதைத் துவக்கி வைத்தார். சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில்அன்புமணி முதல் மரக்கன்றை நட்டார். பிறகு தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், பாண்டிச்சேரி,கடலூர், சிதம்பரம் வழியாக சீர்காழி வரை சென்று மரக்கன்றுகளை நட்டார். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத்தடுக்க இந்த மரக்கன்றுகள் நடுவதாக அன்புமணி தெரிவித்தார்.