உடல்களை ஒப்படைக்க புலிகள், ராணுவம் முடிவு
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் இறந்தவர்களின்உடல்களை சர்வதேச செஞ்சிலுலைச் சங்கம் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ள விடுதலைப் புலிகளும், இலங்கைராணுவமும் முடிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அருகே, கொழும்புத்துறை, சரசாலை, மட்டுவில், நுனவில் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைபிற்பகல் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே, பெரும் சண்டை மூண்டது. புலிகளின்மறைவிடங்களைக் குறிவைத்து ராணுவ வீரர்கள் தாக்கினர். விடுதலைப் புலிகளும் திருப்பித் தாக்கினர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை இந்தத் தாக்குதல் நீடித்தது. மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வரும்சண்டையில் இரு தரப்பிலிருந்தும் இதுவரை 450 பேர் இறந்துள்ளதாகவும், 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வவுனியா பகுதியில் நடந்த தாக்குதலில் இறந்த 37 விடுதலைப் புலிகளின் சடலங்களைசெஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைப்பதாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். அதே போல், புலிகளின் குரல்எனப்படும் ரேடியோ செய்தியில், தாக்குதலில் இறந்த 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் சடலங்களைஒப்படைப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டை குறித்து முழுமையானசெய்திகளை வெளியிட இலங்கை அரசு பத்திரிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது.