அப்துல் கலாம் பணத்தை அபேஸ் செய்த பரத்வாஜ்
ஹைதராபாத்:
வங்கியிலிருந்த ரூ 55.48 லட்சம் பிக்ஸட் டெபாசிட் மற்றும் பிராவிடன்ட் பன்ட் பணத்தை தனது பெயருக்கு மாற்றிய வங்கி ஊழியரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்து ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.சுகுமாரா நிருபர்களிடம் கூறியதாவது:
ஹைதராபாத் சிராக் அலி லேன் பகுதியில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளை அலுவலகத்தில் வேலை செய்து வருபவர் சத்யநாராயணபரத்வாஜ்.
இவர் மீது வங்கி மேலாளர் புகார் கொடுத்திருந்தார். அதில் பிக்சட் டெபாசிட் மற்றும் பிராவிடன்ட் கணக்கிலிருந்த ரூ 55.48 லட்சம் பணத்தை தனதுபெயருக்கு மாற்றியதாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து சத்யநாராயணா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே சந்ரயனக் கட்டா கிளையில் தலைமை அக்கவுன்ட்டன்ட்டாக வேலை பார்த்த போது, விஞ்ஞானி அப்துல்கலாம் போல போலியாகக் கையெழுத்து போட்டு ரூ 1.50 லட்சம் பணம் எடுத்தது தெரிய வந்தது என்றார்.
இவரது தில்லுமுல்லு குறித்துக் கண்டுபிடித்த வங்கி மானேஜர் இதுகுறித்து அபைட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் கையாடல் செய்த பணத்தில் ரூ 20 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.