கோபால் இன்று திரும்புகிறார்?
சென்னை:
வீரப்பனிடம் மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து விட்டு நக்கீரன் கோபால் புதன்கிழமை இரவு சென்னை திரும்புவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் கடத்தப்பட்ட மேலும் மூவரையும் மீட்பது தொடர்பாக நக்கீரன் கோபால், கடந்த 28-ம் தேதி காட்டுக்குச்சென்றார். வீரப்பனுடன் அவர் பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் ஐந்து தமிழ்த் தீவிரவாதிகள் மற்றும் 51 தடா கைதிகளை விடுவிப்பதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. தடா கைதிகளை விடுவிக்க சுப்ரீம்கோர்ட் தடை போட்டுள்ளது. இதையடுத்து தமிழ்த் தீவிரவாதிகளும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்தான் ராஜ்குமார் விடுதலை என்பதில் வீரப்பன் தீர்மானமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால்கோபாலின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், புதன்கிழமை இரவுக்குள் அவர் சென்னை திரும்புவார் என்றுகூறப்படுகிறது.