கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன்!
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு விற்பதற்காக உள்ளாடைக்குள் (அண்ட்ராயருக்குள்) கஞ்சா கடத்திச் சென்ற ஜெயில் வார்டன் கைதுசெய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் வார்டனாக பணி புரிபவர் மகாலிங்கம். வயது ஐம்பது. இவர் நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு மத்திய சிறைக்கு பணிக்குசென்றார். அவரை மத்திய சிறை நுழைவு வாயிலில் ஊழியர்கள் சோதனை செய்தனர்.
அப்போது மகாலிங்கத்தின் உள்ளாடைக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஐந்து கிராம் கொண்ட பத்து பொட்டலங்களை அவர் வைத்திருந்தார்.கைதிகளுக்கு கொடுப்பதற்காக இவர் இதைக் கடத்தினார்.
இது குறித்து மத்தியசிறை துணை அலுவலர் கங்காதரன் பாகாயம் காவல் நியைத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அசோகன், மகாலிங்கத்தைகைது செய்தார்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தான் வார்டனாக இருந்த அதே வேலூர் சிறையிலேயே தள்ளப்பட்டார்.