பாதுகாப்பு சபை சீரமைப்பு குறித்து ஒப்பந்தம் ஏற்படாது ... அன்னான்
நியூயார்க்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பாக நியூயார்க்கில்நடைபெறவுள்ள மில்லனியம் கூட்டத்தில் ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கூறியுள்ளார்.
ஐ.நா சபை சார்பில் மில்லனியம் கூட்டம் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமைஅலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக செய்தியாள்களிடம் அன்னான்பேசுகையில், பாதுகாப்பு சபையில் சீரமைப்பு தொடர்பாக பேசப்படும் என்று கூறமுடியும். ஆனால் அதற்காக ஒப்பந்தம் ஏதும் ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது.சீரமைப்பு தொடர்பான பணிகளை முடிக்க ஒரு ஆண்டு வரை பிடிக்கலாம்.
ஐ.நா. பாதுகாப்பு சபை சீரமைப்பு குறித்து அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் சமீபத்தில்பேசியுள்ளன. பாதுகாப்பு சபையை மேலும் ஜனநாயகம் மிக்கதாகவும், அதிகபொறுப்புள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்று இங்கிலாந்து கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது என்றார் அன்னான்.
மூன்று நாள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் உள்பட ஏராளமானஉலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மில்லனியம் மாநாடு தவிர வேறு பல சிறு,சிறு மாநாடுகளும் நடைபெறவுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.