For Quick Alerts
For Daily Alerts
Just In
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் ... தாமரைக்கனி
மதுரை:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் தராததால், அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.தாமரைக் கனி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தாமரைக்கனி கூறுகையில், மாநில அரசிடமிருந்து நகராட்சிக்கு நிதி வராததால், நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம்வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்குத் தகவல் தெரிவித்தேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.
இதனால், நகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து வியாழக்கிழமை முதல் 12-ம் தேதி வரை போராட்டம் நடத்தவுள்ளேன். 15-ம் தேதி முதல்காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார் தாமரைக்கனி.
Comments
Story first published: Wednesday, September 6, 2000, 5:30 [IST]