மேலூரைக் கலக்கிய ரேக்ளா ரேஸ்
மேலூர் (மதுரை):
மாட்டுப் பொங்கலையொட்டி, மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் (ரேக்ளா ரேஸ்) 56 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
வெளிநாட்டுப் பயணிகளுக்கான 11 ம் ஆண்டு பொங்கல் விழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தய ஆர்வலர்கள் பொது நலச் சங்கம் சார்பில் புதன்கிழமைமாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டிப் பந்தயத்தை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தொடக்கி வைத்தார். பந்தயத்தைக் பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
பெரிய மாடுகளுக்கான பந்தயத்தில் 14 வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசை மேலூர் அருகேயுள்ள கோட்டநத்தம்பட்டி பாலுத்தேவர் வென்றார்.அவருக்கு ரூ 11, 004 பரிசு வழங்கப்பட்டது.
நடுத்தர மாடுகளுக்கான பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடுகளுக்கான பந்தயத்தில் 25 வண்டிகள் கலந்து கொண்டன. பல்வேறுநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பந்தயத்தை ரசித்துப் பார்த்தனர்.