அரசியலுக்கு விடை கொடுத்தார் இரா. செழியன்
சென்னை:
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான இரா.செழியன் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியனின் தம்பிதான் இரா.செழியன் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தைத் துவக்கியபோது, அவருடன் இணைந்து செயல்பட்டவர் இரா. செழியன். அதன் பிறகு திமுகவிலிருந்துவெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார்.
ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து செயல்பட்ட செழியன், பின்னர் ஜனதாக் கட்சி ஜனதாதளமாகமாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் இருந்து வந்தார்.
ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் துவங்கிய லோக் தளம் கட்சியின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
அரசுப் பதவிகளில் நாட்டமில்லாது, இறுதி வரை கட்சிப் பணிகளிலேயே தீவிரமாக இருந்தவர் செழியன். 20ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி பதவி வகித்தவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றவர் இரா.செழியன்.
அரசியலிலிருந்து விலகுவது ஏன் என்று செழியன் வெளியிட்ட அறிக்கையில், எந்த அரசியல் கட்சிக்கும் நான்சொந்தக்காரன் அல்ல. பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும் கூட, மக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில்தொடர்ந்து போராடுவேன். அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன்.
மனிதனை, ஒரு அரசியல் விலங்கு என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகையமனிதனாக, மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் செழியன்.