For Daily Alerts
Just In
மின் கட்டணக் கடனை வசூலியுங்கள் .. அதிமுக
பாண்டிச்சேரி:
தொழிற்சாலைகள் கட்டாமல் வைத்திருக்கும் மின்சாரக் கட்டண பாக்கித் தொகையை உடனடியாக கட்ட பாண்டிச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாண்டிச்சேரி அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை கூடிய பாண்டிச்சேரி அ.தி.மு.க.பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பாண்டிச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச கூலியான ரூ 45 ஐ இன்னும் அமல்படுத்தாத தொழிற்சாலைகள்மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சப் - இன்ஸ்பெக்டர் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாண்டிச்சேரி சுற்றுலா மற்றும் போக்குவரத்து கழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யு.என்.ஐ.
Comments