காஷ்மீர் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படாது?
அஹமதாபாத்:
காஷ்மீர் சண்டை நிறுத்தத்தை நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
கடந்த பத்து வார காலமாக அமலில் இருக்கும் சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு முன் சண்டை நிறுத்தத்தினால் ஏற்பட்ட பலன்கள், தீவிரவாதஇயக்கங்களின் ஒத்துழைப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.
சண்டை நிறுத்தத்தின் போது, தீவிரவாதிகள் மாநில மந்திரியின் வீடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் போன்றவற்றின் தாக்குதல் நடத்தியதோடு ஒருகிராமத்தில் புகுந்து 15 பேரை கொன்றுள்ளனர்.
இதனால் சண்டை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பங்காரு லட்சுமணன் பிரதமரைகேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தாத வரை அதனுடன் காஷ்மீர் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தாது என்றும் அத்வானிதெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.