அந்தமான் நிர்வாகத்திற்கு கடற்படை நிலம்
டெல்லி:
இந்திய கடற்படைக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலம், கார் நிகோபர் தீவு பிரதேச நிர்வாகத்திற்கு அளிக்கப்படுகிறது.
கார் நிகோபார் தீவுகளிலிருந்த மலைவாழ் மக்களை குடியமர்த்துவதற்காக இந்த நிலத்தை வழங்க மத்திய அமைச்சரவை செவ்வாயன்று அனுமதிவழங்கியது.
இந்த நிலங்களை பெற்றுக் கொள்ளும் அந்தமான் நிகோபர் தீவுகளின் நிர்வாகம் போர்ட்பிளேர் விமானநிலையத்தை ஒட்டியுள்ள 70 ஏக்கர் தனியார்நிலத்தை கையகப்படுத்தி விமான ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க வகை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே வழங்கப்படுகிறது.
அந்தமான் நிகோபார் நிர்வாகத்திடமிருந்து 410 ஏக்கர் நிலத்தை இந்திய கடற்படை இலவசமாக பெற்றுள்ளது. இந்நிலம் மீ அதிர்வெண் பாதை கண்டறியும்நிலையம் (ஹை ஃப்ரிகுவென்ஸி டைரக்ஸன் ஃபைன்டர் ஸ்டேஷன்) மற்றும் ராடார் நிலையம் ஆகியவற்றை ஹட்பே பகுதியில் அமைப்பதற்காக
அளிக்கப்பட்டது.யு.என்.ஐ.