Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சுப்ரீம் கோர்ட் செல்கிறது பாண்டி. த.மா.கா.

Published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததைஎதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.

இதுகுறித்து, பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பாலன் நிருபர்களிடம் கூறுகையில், பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்துமனோகர், ஏழுமலை மற்றும் ராஜசேகரன் ஆகியோரை கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மனோகர் பிரிவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவர்களைப் பதவிநீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் மற்றும் கந்தசாமியின் சார்பில் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றுஇவ்வழக்கு குறித்து வாதாட உள்ளனர். இதுகுறித்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு செய்வார்கள் என்றார்.

முன்னதாக, பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் மனோகர், ஏழுமலை மற்றும் ராஜசேகர் ஆகியோர் கட்சியிலிருந்துபிரிந்தனர். அவர்கள், ஏற்கனவே எம்.எல்.ஏ. ஜெயக்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்ற த.மா.கா.எம்.எல்.ஏ. கண்ணனுடன் சேர்ந்தனர். மனோகர் தலைமையிலான கூட்டணி தாங்கள்தான் உண்மையான த.மா.கா. என்று கூறிக் கொண்டனர்.

இதையடுத்து பாண்டிச்சேரி சட்டசபை சபாநாயகர் இவர்கள் மூவரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைஎதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.சுப்பிரமணியன், ஒரு கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் என்பது தமிழ்நாடு,பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு என்று பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் கொடுத்துள்ள விளக்கம்அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. அதனால் எம்.எல்.ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று உத்தரவிட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs