நல்ல பதிலளிப்பார் மூப்பனார் .. கருணாநிதி நம்பிக்கை
மதுரை:
தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இணையும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கைதெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், சட்டசபைத் தேர்தலில் மகாகூட்டணி அமைக்கப்போவதாக அ.தி.மு.க.கூறிவருகிறது. அது மகா கூட்டணியாஅல்லது மகாமக கூட்டணியா என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த மாதம் 16-ம் தேதி தி.மு.க.வின் பொதுக்குழு கூடவுள்ளது. அதன் பின்நிர்வாகக்குழு கூட்டமும் நடைபெறும். அப்போது கூட்டணி பற்றி ஆலோசனை செய்துமுடிவெடுக்கப்படும்.
த.மா.கா. எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புகிறோம். சபாநாயகர்பழனிவேல் ராஜனும் பேசியிருக்கிறார். அவை முன்னவர் பேராசிரியர் அன்பழகனும்அழைப்பு விடுத்துள்ளார். நாானும் அழைப்பு விடுத்துள்ளேன். மூப்பானிரிடமிருந்துநல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறேன்.
பூகம்பம் வருவது குறித்து கூட கணித்துவிடலாம் என நினைக்கிறேன்.
மூன்றாவது அணி பற்றி எதுவும் கணிக்க முடியவில்லை.
பா.ம.க. விலகியது அவர்களுக்குத்தான் பலவீனம், எங்களுக்கு இல்லை. ரஜினிகாந்தைதமிழ்க்குடிமகன் பார்த்து பேசியதாக கூறப்படுவது தவறான செய்தி. அது வெறும்புரளி.
மதுரை துணை மேயர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து பதவியில்நீடிப்பது பற்றி எதுவும் கூற இயலாது.
வாக்காளர் அடையாள அட்டை 63 சதவிகிதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகதேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது, அடையாள அட்டை பற்றி பொதுமக்கள்கொடுத்த புகார்களை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்து தேவையான நடவடிக்கைஎடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்,
வீரப்பனை எப்போது பிடிக்க முடியும் என கூற இயலாது ஆனால் வீரப்பனை பிடிக்கும்முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.