பா.ம.க.வால் கூட்டணியில் குழப்பமில்லை .. ஜெ.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் சேர்த்துள்ளதால், காங்கிரஸ்மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பதற்குப் பிரச்சினையில்லை என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த பழனி நாடாளுமன்றஇடைத்தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கோரியது. அதேபோல,புதுக்கோட்டை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆதரவை, பாட்டாளி மக்கள் கட்சி கோரியது.
இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு தேவை என்றுதான் பாட்டாளி மக்கள் கட்சி கோரி வருகிறது. தனித் தமிழ்நாடு கோரவில்லை. எனவே அக்கட்சியின் போக்கு பிரிவினைவாதப் போக்கு அல்ல.
பாண்டிச்சேரியில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எந்த முடிவையும் அதிமுக இதுவரைஎடுக்கவில்லை.
த.மா.கா.வும், காங்கிரஸும் இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்காததால், கூட்டணிக் கட்சிகளுடன்தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவது தாமதமாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தைமுடிவடைந்தால் நலமாயிருக்கும்.
திமுக கூட்டணி இப்போது பலவீனமடைந்துள்ளது. எனவே தமிழ் மாநில காங்கிரஸை இழுக்க முதல்வர்கருணாநிதி பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்.
ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கொலை செய்ததற்குக் காரணம், கருணாநிதி அரசு போட்டுக்கொடுத்த பாதையே காரணம்.
வீரப்பனுக்கும், கருணாநிதிக்கும் இடையே ரகசிய உறவு இருக்கிறது. வீரப்பன் காட்டில் பிடிபட்ட டிஜிட்டல் டைரி,செல் போன்கள் போன்றவற்றை கேரள போலீஸ் பிடித்தது. அந்த போன் மற்றும் டைரியில், பலஅரசியல்வாதிகளின் ரகசிய எண்கள், கருணாநிதியின் தொலைபேசி எண்கள் இருந்தன.
கேரள முதல்வர் கூறியுள்ளபடி, தமிழக அரசு நினைத்தால் வீரப்பனை எளிதில் பிடித்திருக்க முடியும் என்பதே எனதுகருத்தும்.
தேர்தலில் வீரப்பன் பிரச்சினையை பெரிதாக்குவோம். தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்புப் படைஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் அமைப்புகள். இவை வீரப்பனுடன் சேர்ந்துள்ளதுஅபாயகரமானது என்றார் அவர்.
யு.என்.ஐ.