Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மதுரை துணை மேயர் மனு .. ஐகோர்ட் நிராகரித்தது

Published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]

சென்னை:

மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன், தன்னை மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளஅனுமதிக்குமாறு கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது.

மதுரை நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் பட்டப் பகலில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மிசா.பாண்டியன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மிசா. பாண்டியன் தொடர்ந்து இரண்டு மாநகராட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்தார். மூன்றாவதுகூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் உறுப்பினர் பதவியை அவர் இழப்பார். எனவே விரைவில்நடைபெறவுள்ள மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரிபாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம், மிசா. பாண்டியனின் மனு முறையானதாக இல்லை என்று கூறிநிராகரித்து விட்டார். இதையடுத்து மிசா. பாண்டியன் அடுத்த மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதுகேள்விக்குரியதாகி விட்டது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter