For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளை அழிக்க இலங்கைக்கு 20 மில்லியன் டாலர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதங்கள் வாங்க இலங்கை ராணுவத்திற்கு 20 மில்லியன் டாலர் கடனுதவிவழங்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி முகமது யூசுப் கான், உயர் அதிகாரிகள் குழுவுடன் இலங்கைத் தலைநகர் கொழும்பு வந்து இலங்கை ராணுவத் தளபதி கலோனல்பாலகாலேவைச் சந்தித்துப் பேசிய பின், இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கவும்,வெடிமருந்துகள் வாங்கவும் பாகிஸ்தான் 20 மில்லியன் டாலர்கள் கடனுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் இதுகுறித்து இறுதி முடிவுஎட்டப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது இலங்கை ராணுவம்ஆயுதப் பற்றாக்குறையாலும், ராணுவ வீரர்கள் பற்றாக்குறையாலும் தவித்தது. அப்போது இந்தியா உள்பட வெளிநாடுகளின் உதவியை இலங்கைநாடியது. இருப்பினும், இந்தியாவிலிருந்து ராணுவ வீரர்களையோ, ஆயுதங்களையோ அனுப்புவதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், இஸ்ரேல், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இலங்கை ஆயுத உதவி கோரியது. அந்த நேரத்தில், இலங்கை அரசுக்கு உதவிசெய்ய மத்திய அரசு மறுத்து வந்தாலும் இறுதியில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக இந்தியா 100 மில்லியன் டாலர்கள்கடனுதவி அளித்தது.

அதற்குப்பின் ஆயுத பலத்தை வலுப்படுத்திக் கொண்ட இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகளிடமிருந்து சில பகுதிகளை மீட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் பணஉதவி செய்வதாக அறிவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X