For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடைகிறது புதிய தமிழகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய தமிழகம் கட்சி இரண்டாக உடைகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கட்சி நிர்வாகி செல்வம் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம்செவ்வாயன்று கூடுகிறது.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய கட்சியின் அணித் தலைவரான வழக்கறிஞர் மெய்ஞானமூர்த்தி கூறுகையில், செல்வத்தை தன்னிச்சையாக கட்சியிலிருந்துநீக்கியது மட்டுமல்லாது அவரின் ஆதரவாளர்களையும் கட்சியிலிருந்து கிருஷ்ணசாமி நீக்கியுள்ளார்.

செவ்வாயன்று நடைபெறும் கட்சியின் பொதுக்குழுவில் கிருஷ்ணசாமியை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்களில்200 பேர் வரை இக்கூட்டத்தில் பங்கு பெறுவர்.

கிருஷ்ணசாமியின் செயலை விரும்பாதவர்களில் பெரும்பாலோர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து (மூர்த்தி பிரிவு) செல்வம் தலைமையில் புதியதமிழகத்திற்கு வந்தவர்கள். இவர்கள் மீண்டும் அந்த முன்னணிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

கொலை வழக்கு ஒன்றில் போலீஸார் செல்வம் கைது செய்யப்பட்டதையடுத்து செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கோபமுற்ற செல்வத்தின்ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியின் அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடினர் என்பது நினைவிருக்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X