த.மா.காவை அழைப்பதில் தவறில்லை . வாழப்பாடி
சென்னை:
தே.ஜ. கூட்டணியிலிருந்து பா.மக. விலகியது எந்த விதத்திலும் தே.ஜ முன்னணியின்வெற்றி வாய்ப்பை பாதிக்காது என தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில், இது குறித்து வாழப்பாடி ராமமுர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,பா.ம.க தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலக முன்னரே முடிவு ச்ெய்துவிட்டது.
காங்கிரஸ் , விடுதலை புலிகளை ஆதரிக்கும் பா.ம.க. இடம் பெற்றுள்ளஅ.தி.மு.க.கூட்டணியில் சேர்ந்தால் அது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைஇரண்டாவது முறையாக கொன்றது போலாகும்.
1996-ம் ஆண்டு பா.ம.க. தனித்து சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டபோது, அந்தகட்சிககு 2.65 சதவிகித ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இந்த அளவு ஓட்டுகள் நஷ்டம்தே.ஜ. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை எந்த விதததிலும் பாதிக்காது.
தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி த.மா.கா. வை மீண்டும் தி.மு.க.வுக்குஅழைப்பதில் தவறு ஒன்றுமில்லை. 1996-ம் ஆண்டு அ.தி..மு..கவுடன் கூட்டணிஅமைத்ததை எதிர்த்தே மூப்பானார் தனி கட்சி தொடங்கினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவிடம் முழுவதுமாக சரண் அடைந்து விட்டார். அவர்தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி, பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்போம்என்று கூறியதை எல்லாம் மறந்து விட்டு ஜெயலலிதாவிடம் சரணடைந்து விட்டார்.
த.ரா.கா.வின் உயர் மட்ட குழு கூட்டம் இந்த மாதம் 17-ம் தேதிநடக்கவுள்ளது.அப்போது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியும் என ஆலோசிப்போம்.
தி.மு.க. தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் அந்த தொகுதிகளைஎங்களுக்கு தருமாறு கேட்போம் என கூறினார்.
யு.என்.ஐ.