For Daily Alerts
Just In
விடுதலைப் புலிகளுக்கு உதவியவர் கைது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் தலைமறைவாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு உதவியவரை போலீஸார் கைது செய்தனர்.
1996-ம் ஆண்டு மண்டபம் கடற்கரையில் போலீஸார் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அப்பகுதி வழியேசென்று கொண்டிருந்தது.
போலீஸாரைக் கண்டதும் அக்கும்பல் அப்பகுதியிலிருந்து ஓட ஆரம்பித்தது. இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். போலீஸாரைக்கண்டதும் தப்பியோடியதில் ராமேஸ்வரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சேதுராமனும் ஒருவர்.
கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இவரை, மண்டபம் அருகே போலீஸார் கைது செய்தனர். இவரை விசாரித்த போது புலிகளுக்கு மோட்டார்வாகனங்கள் விநியோகம் செய்யும் ஏஜன்டாக இவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
Comments
Story first published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]