தேர்தலில் போட்டியிடுவாரா? ஜெ. விளக்கம்
சென்னை:
நான் தேர்தலில் போட்டியிடலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் எனஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறுகையில், பல கட்சியினரும்நான் தேர்தலில் போட்டியிட முடியுமா என வினா எழுப்பிவருகிறார்கள். அவர்களுக்குநான் கூறிக் கொள்வது பொறுத்திருந்து பாருங்கள் என்பதுதான்.
நான் தேர்தலில் போட்டியிடலாமா, கூடாதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.
பா.ம.க, மதசார்பற்ற கூட்டணியில் இணைந்ததால் விடுதலை சிறுத்தை இயக்கம்கூட்டணியை விட்டு விலகப் போவதாக கூறி வருகிறது. பல தலித் கட்சியினர் மதசார்பற்ற கூட்டணியில் தான் இருக்கிறார்கள்.
மூப்பனார், நான் மத சார்பற்ற கூட்டணியில் தான் இருக்கிறேன். அ.தி.மு.க.கூட்டணியில் இல்லை என கூறியது சரிதான். தேர்தல் கூட்டணி இன்னும்ஏற்படவில்லை. எனவே அவர் கூறியது சரிதான் என கூறினார்.
யு.என்.ஐ.