பூஜ்ஜில் 80 சதவீத இடிபாடுகள் அகற்றப்பட்டன
பூஜ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில் பூகம்பத்தால் இடிந்து தரைமட்டமான கட்டிட இடிபாடுகளை நீக்கும்பணி 80 சதவீதம்நிறைவடைந்து விட்டது என்று மாநில சாலைப் பராமரிப்பு மற்றும் கட்டிடத்துறை முதன்மை இன்ஜினியர் பாலாலா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பாலாலா நிருபர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வீடுகள் 60 சதவீதம் வரைஇடிந்து தரைமட்டமாகியுள்ளன. 20 சதவீத அரசு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்க்கும் நிலையில் உள்ளன.
225 என்ஜினியர்கள், 165 கட்டிடத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இடிபாடுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் ரூ 110கோடிக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் எம்.கே.சேத் கூறுகையில், ஆப்டிக்கல் பைபர் சிஸ்டம் மூலம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றார்.
யு.என்.ஐ.