For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேவே கெளடா மனைவி மீது ஆசிட் வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பெங்களூரிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹார்டனஹள்ளி கிராமத்தில் முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் மனைவி சென்னம்மா மீது அவரது தேவெ கெளடாவின் அண்ணன் மகன் ஆசிட் வீசினார்.

இதில் சென்னம்மாவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஹார்டனஹள்ளியிலுள்ள ஈஸ்வரர் கோவிலில் சாமிகும்பிட்டுக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது.

சென்னம்மா தனது மருமகள் பவானி ரேவண்ணாவுடன் மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஈஸ்வரர்கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது தேவெ கெளடாவின் மூத்த அண்ணன் பசவ கெளடாவின் மகன்ஆஸிட் வீசினார்.

ஆஸிட் வீச்சில், சென்னம்மா தவிர, அவரது மருமகள் பவானியும், பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்தனர். 3பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

59 வயதாகும் சென்னம்மாவுக்கு ஆசிட் வீச்சால் 35 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸார், ஆசிட் வீசிய, பசவ கெளடாவின் மகனைக் கைது செய்தனர். இதுகுறித்து தேவ கெளடாகூறுகையில், என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என் மனைவி மீது ஆஸிட் வீசியுள்ளனர் என்றார்.தேவ கெளடா 1997 - 97 ம் ஆண்டில் பிரதமராக இருந்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X