பூகம்ப சேதம் 21, 261 கோடி
டெல்லி:
பூகம்பத்தால் ரூ 21, 262 கோடி பெறுமானமுள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது என்று குஜராத் மாநில அரசு கணக்கிட்டுள்ளது.
இருப்பினும் பிரதமர் வாஜ்பாய் தலைமையில், திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்ட இயற்கைச் சீற்றநிவாரணக் கமிட்டியினரும் சேத மதிப்பைக் கணக்கிட்டுள்ளனர்.
இவர்கள் சமர்பித்த அறிக்கை குறித்து, விவசாயத்துறை இணை அமைச்சர் ஷிர்பாடு நாயக் நாடாளுமன்றத்தில் கூறுகையில், பூகம்பத்தால் இடிந்துதரைமட்டமான வீடுகளின் சேத மதிப்பு 11,195 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநில தொழிற்சாலைகளில் ரூ 5000 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. வணிக ஸ்தலங்களில் 3000 கோடியும், பொதுப்பணித் துறையில் ரூ 1080கோடியும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நிதிஷ் குமார், பூகம்பத்தால் ஏறபட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய அதிக அளவு நிதி தேவைப்படும். நிவாரண நடவடிக்கைகள்துரிதமாக நடந்து வருகின்றன என்றார்.
யு.என்.ஐ.