For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகி ராம்சூரத் குமார் மஹா சமாதி

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஆசிரமத்தில் யோகி ராம்சூரத் குமார் மஹா சமாதி வைபவம் புதன்கிழமை நடந்தது.

விசிறி சாமியார் யோகி ராம்சூரத்குமார் திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். சில மாதங்களாகவே இவர்புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து இவர் சென்னையிலும், திருவண்ணாமலையிலுமாக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிசெவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார்.

இதையடுத்து இவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் இவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சுவாமியின் உடல் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு மஹா சமாதிபுறப்பாடு துவங்கி ஆசிரமத்தை வலம் வந்தது. 4.40 மணிக்கு மஹா சமாதியில் சுவாமி வைக்கப்பட்டார்.

தமிழக அமைச்சர் பிச்சாண்டி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மாவட்டக் கலெக்டர் தங்க கலியபெருமாள்,எஸ்.பி.விஜயகுமார், எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில். மகா சமாதி நிகழ்ச்சியை ஆசிரமஅறக்கட்டளை நிர்வாகி ஜஸ்டிஸ் அருணாசலம் ராம்சூரத் நடத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X