திருச்சி:
மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் புதிதாக ஆரம்பித்துள்ள ஜனசக்தி கட்சியின் சைக்கிள் பேரணியைதிருச்சியில் தலித்சேனையின் தமிழக பொதுச்செயலாளர் நம்பியார் தொடங்கி வைத்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெறவுள்ள ஜனசக்தி கட்சியின் தமிழக பிரிவின்தொடக்கவிழா நிகழ்ச்சியில் இப்பேரணி நிறைவுபெறும்.
பேரணியை தொடக்கி வைத்து பேசிய நம்பியார், பாஸ்வான் தலைமையில் ஒரு தேசிய கட்சியை ஆரம்பிப்பதின்நோக்கம் பற்றி பேரணியினர் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தலித்துகள் வாழும் இடங்களில் அவர்கள்சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தகவல் சேகரித்து கட்சியின் தொடக்கவிழாவிற்கு வரும் மத்திய அமைச்சர்ராம்விலாஸ் பாஸ்வானிடம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
யு.என்.ஐ.










