உடுமலையில் நாராயண கவிக்கு மணி மண்டபம்
கோவை:
கோவை மாவட்டம் உடுமலையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்காக ரூ 22.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாராயண கவி மணிமண்டபத்தைமுதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறார்.
கோவைக்கு பிப். 23 ம் தேதி வரும்முதல்வர் கருணாநிதி, அங்கிருந்து திருப்பூர் வந்து சேருகிறார். அங்கு வேலன் ஹோட்டலில் தங்குகிறார். அங்கிருந்துஉடுமலைக்குச் செல்கிறார்.
உடுமலைப் பேட்டையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையால் ரூ. 22. 5 லட்சத்தில் உருவாக்கப்பட்ட நாராயண கவி மண்டபத்தைத் திறந்துவைக்கிறார். இதன் பிறகு கோவை வரும் முதல்வர், இரண்டரை கோடி செலவில் கட்டப்பட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர், கொடீசியா தொழில்கண்காட்சி வளாகத்தில் நடக்கவிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக் கண்காட்சியைத்திறந்து வைக்கிறார். இந்தக் கண்காட்சி 23 ம் தேதி மாலை துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
இதில், மகளிர் குழுக்கள் தயாரித்த பொருட்கள் இடம் பெறுகின்றன. நீலகிரி, ஈரோடு, கோவை, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தயாரித்த பொருட்கள் இதில் இடம் பெறுகின்றன. பின்னர், பூமாலை வணிக வளாகத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்கிறார் முதல்வர் கருணாநிதி.