For Quick Alerts
For Daily Alerts
Just In
தேர்தலுக்கு தயாராகிறது தெலுங்கு சம்மேளனம்
நாமக்கல்:
எங்களது முக்கிய கோரிக்கையை ஏற்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் கட்சிக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என தமிழ் மாநில தெலுங்குசம்மேளனம் புதன்கிழமை அறிவித்தது.
நாமக்கல்லில் தெலுங்கு சம்மேளனத் தலைவர் கெங்குசாமி நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 1938 ம் ஆண்டு முதல் தெலுங்கு சமுதாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எந்த அரசியல் கட்சியும் எங்களைக் கண்டு கொள்வதாக இல்லை.
எனவே, வரும் தேர்தலில் எங்களது 12 அம்சக் கோரிக்கையை ஏற்று, அதனை தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோருக்கு ஆதரவளிக்க முடிவுசெய்துள்ளோம் என்றார் கெங்குசாமி.
Comments
Story first published: Thursday, February 22, 2001, 5:30 [IST]