For Daily Alerts
Just In
கேரளாவில் "சிகப்பு" மழை
கோட்டயம்:
கேரளாவில் நேற்று (புதன்கிழமை) அதிசயமாக சிகப்பு நிறத்தில் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து புதன்கிழமை செங்கனச்சேரி மாவட்டத்திலுள்ள மோர்குளங்கராவில் பெய்த மழைநீர் சிகப்புநிறமாகக் காணப்பட்டது. இதைக்கண்ட அக்கிராம மக்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதைப் பார்த்த கணபதி என்பவர், உடனே இதுகுறித்து நில ஆராய்ச்சி மையத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதுபற்றி விரைந்து வந்து, அந்த மழை நீரைச் சேகரித்துக் கொண்டு சென்றனர் நில ஆராய்ச்சி அதிகாரிகள்.மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தி முடிவு தெரியும் வரை பொதுமக்கள் யாரும் அந்த மழை நீரைப் பயன்படுத்தவேண்டாம் என்று ஒரு அதிகாரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு கூடி, "சிகப்பு" மழை நீரை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, May 18, 2001, 5:30 [IST]