For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீர் வன்முறை: ஒரே நாளில் 21 பேர் பலி
காஷ்மீர்:
காஷ்மீரில் கடந்த ஒரு நாளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில், 7 பாகிஸ்தான் ஊடுறுவல்காரர்கள், 3 இந்தியராணுவ வீரர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டுகள் ஏற்றிய வாகனத்தில் வந்த தீவிரவாதிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் பாத்காம்பகுதியில் உள்ள சிறப்பு பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதல் நடத்தினார்.
இதில் முகாம் முழுவதும் சேதமடைந்தது. தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதி உடல் சிதறி உயிரிழந்தார். மேலும்ஒரு சி.ஆர்.பி.எஃப். வீரரும் பொதுமக்களில் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
7 புறக்காவல் படையினர் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என்று அவர்கள் கூறினர்.
Comments
Story first published: Friday, September 7, 2001, 5:30 [IST]