திமுக பேரணி வன்முறையில் கைதான 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
கடந்த மாதம் 12ம் தேதி சென்னையில் நடந்த திமுக பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 15 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அசோக்குமார் கடந்த 29ம் தேதி முன்பு வந்தது. அப்போது நீதிபதி, "இவர்கள்15 பேரும் உண்மைக்குற்றவாளிகள் அல்ல. எனவே, விரைவில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும்" என்று அரசு தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.
அரசு வக்கீலும், செப்டம்பர் 5ம் தேதிக்குள் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றுஉதியளித்தார். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை, செப்.6) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் முடிவில் நீதிபதி அசோக்குமார் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரர்கள் கடந்த 19 நாட்களாக சிறையில் உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல்தகவல் அறிக்கையில், அயோத்திக் குப்பம் பகுதி மக்கள் ஆயுதங்களால் தாக்கியதை போலீசாரால் தடுக்கமுடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இவர்களிடமிருந்து போலீசார் ஆயுதங்கள் எதையும் பறிமுதல் செய்ததாகவோ, அது தொடர்பாகஅடையாள அணிவகுப்பு நடத்தப் பட்டதாகவோ போலீசார் தரப்பில் தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த 29ம் தேதி விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் உறுதியளித்தபடி, உண்மைக் குற்றவாளிகள்யாரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை.
எனவே இந்த 15 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்கிறேன். இவர்கள் அனைவரும் ரூ.5,000க்கானரொக்க ஜாமீனும், 2 நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். மேலும், இவர்கள் அனைவரும் சேலத்தில் தங்கி இருந்து,அங்குள்ள முதலாவது ஜூடிசியல் மேஜிஸ்ட்ரேட் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.