சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் சசிகலா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இன்று (வெள்ளிக்கிழமை) காஞ்சிபுரத்திற்குச் சென்றுகாஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
காஞ்சிப் பெரியவர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, பின்னர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவர்அங்கிருந்து கிளம்பி சென்னை திரும்பினார்.
முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கும் சசிகலா சென்றார். அங்கு பயபக்தியுடன் பூஜைகள்செய்தார். அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் சார்பிலேயே சசிகலா காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்திக்க வந்ததாகத் தெரிகிறது. தற்போதையஇக்கட்டான சூழ்நிலையில், சங்கராச்சாரியாரின் ஆசியை ஜெயலலிதா சார்பில் சசிகலா பெற்றுச் சென்றுள்ளார்என்றும் பேச்சு அடிபடுகிறது.