For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வீடு முன் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த மதுரையைச் சேர்ந்த ஒரு அதிமுக தொண்டர், அவரைப் பார்க்கமுடியாததால், முதல்வர் இல்லம் உள்ள போயஸ் தோட்டம் முன் தீக்குளித்தார்.

மதுரையைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வீட்டு வசதிக் கழகம்மூலம் வீடு வாங்க மனுச் செய்திருந்தார். ஆனால் அப்போது கடன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மீண்டும் ஜெயலலிதா முதல்வராகியுள்ளதால், மறுபடியும் அவரைச் சந்தித்து மனு கொடுத்து கடன்கேட்க பாண்டியன் முடிவு செய்தார். இதற்காக தனது குடும்பத்தினருடன் சென்னை வந்த அவர், போயஸ்தோட்டத்திற்கு வந்தார்.

அங்கு முதல்வரைச் சந்திக்க பாண்டியனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர்,அங்கிருந்தவர்களிடம் தனது மனுவைக் கொடுத்துவிட்டு வருத்தத்துடன் திரும்பினார்.

இருப்பினும் முதல்வரைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் பாண்டியனிடம் தலைதூக்க, சாலையில் கிடந்தமண்ணெண்ணை டின்னை எடுத்து தன் மீது கொட்டிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.

தீக்காயம் பட்டு அலறித் துடித்த அவரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள்கொண்டு சென்றனர். அங்குஅவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 85சதவீத பாகங்கள் எரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X