டான்சி விசாரணைக்கு தடை: அப்பீல் மனு மீது இன்று விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கின் அப்பீல் மனுக்களை விசாரிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றுஅரசு வக்கீல் வெங்கடபதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இருப்பினும் அதிமுக அந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னைஉயர் றீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடந்தது. அப்போது அரசுதரப்பு வக்கீலாக இந்த வழக்கில் ஆஜரான வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்தார்ல.
அம்மனுவில், "தனிநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றியும், அப்பீல் மனுக்கள் பற்றியும் படித்துப் பார்க்க எனக்குஅவகாசம் தரப்படவில்லை. எனவே அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையைத் தடைசெய்ய வேண்டும்" என்றுகோரியிருந்தார் வெங்கடபதி
இந்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பரூச்சாதலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
விசாரணையின் முடிவில் வக்கீல் வெங்கடபதிக்கு அவகாசம் வழங்கப்படுகிறதா என்றும், வழக்கு விசாரணை வேறுஉயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்றும் தெரியவரும்.