தமாகா நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பதில் குழப்பம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதற்கிடையில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தபின்னர்இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், மூப்பனார் மறைந்துவிட்டதால், நிர்வாகிகள் பதவிகள் காலியாகவே இருக்கின்றன. இந்நிலையில் தமாகாதலைவராக கோவிந்த வாசன் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டிருப்பதால், புதியவர்களை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, பழைய நிர்வாகிகளையே தேர்தல் வரை அந்தந்தப் பணிகளில் நியமிக்கலாம் என்று உயர்மட்டத்தலைவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று (வியாழக்கிழமை) பழைய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும்என்று கூறப்பட்டது. இதையடுத்து நிருபர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில்காத்திருந்தனர்.
ஆனால், பழைய நிர்வாகிகளையே மீண்டும் அறிவிப்பது குறித்து முன்னணித் தலைவர்கள் மத்தியில் குழப்பம்எழுந்துள்ளது. இதையடுத்து, நிர்வாகிகள் பட்டியல் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், இந்தப் பட்டியலைதலைவர் வாசன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.