For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினபூமி அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்: 2 நிருபர்கள் படுகாயம்

By Super
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் தினபூமி பத்திரிக்கை அலுவலகததை ரவுடிக் கும்பல் பயங்கரமாகத் தாக்கியது. இதில் 2 நிருபர்கள்படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை தினபூமி அலுவலகத்தில் இத் தாக்குதல் நடந்தது. 6 கார்களில் வந்த பெரிய கும்பல் கேட்டைஉடைத்துக் கொண்டு தினபூமி அலுவலகத்துக்குள் நுழைந்தது. அவர்களைத் தடுக்க முயன்ற காவலருக்கும் அடிவிழுந்தது.

நேராக எடிட்டோரியல் (செய்தி ஆசிரியர்கள் அறை) அறைக்குள் நுழைந்த அந்தக் கும்பல் பணியில்ஈடுபட்டிருந்த உதவி ஆசிரியர்களையும் நிருபர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது.

இதில் நிருபர்களான பன்னீர்செல்வம், சுந்தரபாண்டியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களிடம் இருந்துதப்ப முயன்ற பத்திரிக்கை ஆசிரியர் திருநாவுக்கரசு மற்றும் 2 உதவி ஆசிரியர்களையும் அக் கும்பல் விரட்டிவிரட்டி தாக்கியது.

பின்னர் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், கேமராக்கள், நாற்காலிகள், தொலைபேசிகள் ஆகியவற்றை அக்கும்பல் உடைத்து நொறுக்கியது.

இத் தாக்குதலுக்கு யார் காரணம் என்று தெரியவில்லை.

ஆனால், இத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் நடத்தியிருக்க வேண்டும் என போலீசார்சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் இப் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவைமார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

அதிமுக-மார்க்சிஸ்ட் இடையே கூட்டணி ஏதும் இல்லை. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இந்நிலையில் தினபூமியில் வெளியான இச் செய்தி வாக்காளர்கள் இடையே குழப்பத்தை உருவாக்கிவிட்டதாகமார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

இதையடுத்து அக் கட்சியினர் தான் தினபூமி மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

ஆனால், பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X