மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்
சென்னை:
நேற்று (சனிக்கிழமை) மரணமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்தியஅமைச்சருமான மரகதம் சந்திரசேகரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மரகதம் சந்திரசேகர் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிசடங்கு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
மரகதம் சந்திரசேகரின் உடல் அண்ணா நகரிலுள்ள அவரது மகள் லதா பிரியாகுமார் வீட்டில் பொதுமக்களின்அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை மரகதம் சந்திரசேகரின் உடல் அண்ணா நகரிலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, சென்னை நியூ ஆவடி மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இறுதி சடங்கில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன், அகில இந்திய காங்கிரசின் மூத்த தலைவர்கள்ஆஸ்கார் பெர்னாண்டஸ், மோதிலால் ஓரா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.