"அதிமுக வாபஸ் புதுவை ஆட்சியைப் பாதிக்காது"
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டதால்ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அகில காங்கிரஸ் கட்சிப் பொதுச் செயலாளர்ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு அதிமுக அளித்துவந்த ஆதரவை இன்று(செவ்வாய்க்கிழமை) திடீரென வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ்பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதாலா நிருபர்களிடம் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிமுக அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் முதல்வர்ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
30 பேர் கொண்ட பாண்டிச்சேரி சட்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் உள்ளன. மேலும் 2 சுயேச்சைகளும்ஆதரவு அளித்துவருகிறார்கள். இதுதவிர தமிழ் மாநில காங்கிரசும் தனது 2 உறுப்பினர்களுடன் எங்களுக்கு ஆதரவுஅளித்து வருகிறது.
நான் இதுகுறித்து பாண்டிச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியுடன் தொடர்பு கொண்டுபேசிக்கொண்டிருக்கிறேன். அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும்ஏற்படப் போவதில்லை என்றார் சென்னிதாலா.
19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் தன்னுடைய அமைச்சரவைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றுரங்கசாமியும் கூறியுள்ளார்.